நபிகளின் நல்லுரைகள்--அழிவில்லாத கல்வி--அமுத மொழிகள்

அழிவில்லாத கல்வி நபிகளின் நல்லுரைகள் * சன்மார்க்க கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆண் பெண் மீதும் கட்டாயக் கடமையாகும். * மார்க்க கல்வி...


அழிவில்லாத கல்வி

நபிகளின் நல்லுரைகள்
* சன்மார்க்க கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆண் பெண் மீதும் கட்டாயக் கடமையாகும்.
* மார்க்க கல்வியை கற்றுக் கொள்வதற்காக எவர் ஒரு ஊருக்கு புறப்பட்டு விடுகிறாரோ அவர் அதனைக் கற்று மீண்டும் ஊர் திரும்பும்வரை சன்மார்க்க வழியில் ஈடுபட்டவராகவே கருதப்படுவார்.
* இஸ்லாத்தை உயிர்ப்பிப்பதற்காக ஒருவன் கற்றுக்கொண்டு வரும்
சமயத்தில் மரணித்து விடுவானேயானால் சொர்க்கத்தில் நபிமார்களுடன் இருக்கும் நற்பதவியை கிடைக்கப் பெற்றவனாகிவிடுகிறான்.
* மார்க்கக்கல்வியை தேடிப்புறப்பட்டவர் திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறார்.
* மனிதன் கல்விக்காக செய்கிற தருமம் அவன் மரணித்த பிறகும் நன்மை பொழியும்.
* கற்றுக்கொடுப்பவரும் கற்றுக் கொள்பவரும் நேர்வழியில் இருக்கின்றனர். இந்த நிலை அற்றவர்களிடம் எந்த நல்வழியுமில்லை.
* அல்லாஹ்வின் சேவைக்கல்லாமல் (உலக வாழ்வின்) நோக்கத்திற்காக கல்வி கற்பவன் நரகத்தை இருப்பிடமாகக் கொள்ளட்டும்.
* எந்த ஒரு அடியானை இறைவன் இழிவுபடுத்த விரும்புகிறானோ அவனை மார்க்க கல்வியை கற்றுக்கொள்வதை விட்டு நீக்கி விடுகிறான்.
* மார்க்க கல்வி நபிமார்களின் உரிமைப் பொருள். செல்வம் பிர்அவ்னின் உரிமைப் பொருள். அதிகமாக வணக்கம் புரிவதைவிட அறிவை அதிகமாக்கிக் கொள்வதே மேலாகும்.
* கல்விக்கு அழிவே இல்லை. அதுபோன்று அதற்காக கொடுக்கும் பொருளுக்கும் அழிவே இல்லை.
* எனக்குப்பின் மார்க்கக்கல்வி வெகுவிரைவில் அகன்றுவிடும். பின்பு குழப்பங்கள் வெளிப்பட்டுவிடும். அறியாமை மிகைத்துவிடும். அதனால் மக்கள் மத்தியில் கட்டாயக் கடமையான விஷயங்களில் கூட (சண்டை) சச்சரவுகள் உண்டாகிவிடும். அவர்களை சமாதானம் செய்து வைக்கும் அளவுக்கு அறிவுள்ளவர் அப்போது இருக்கமாட்டார்கள்.
* எனது உம்மத்தினரை நாசப்படுத்தும் வஸ்துக்கள் இரண்டு; 1. கல்வி கற்பதை விட்டுவிடுவது 2. பொருள்களை சேர்ப்ப தில் முழு நேரத்தையும் செலவு செய்வது.
* நம்மிடத்தில் ஒரு ஹதீஸை அல்லது ஒரு சட்டத்தைக் கேட்டு அறிந்து கொள்வது ஆயிரம் ரகஅத் நபில் தொழுவதை விட மேலானதாகும். ஏனென்றால் அவர் மார்க்க கல்வி கற்கும் நிலையில் அவருக்கு மரணம் வருமேயானால் (ஷஹீதாக) வீரத்தியாகியாக மரணிக்கிறார்.
* உங்களுக்கு மார்க்க கல்வியை கற்றுக் கொடுத்தவரை கண்ணியப்படுத்துங்கள்.
* அல்லாஹ்வின் சேவைக்கு அல்லாமல் வேறு (உலக வாழ்வின்) நோக்கத்திற்காக கல்வி கற்பவன் நரகத்தையே தன் இருப்பிடமாகக் கொள்வான். 


பிராணிகளிடம் அன்பு செலுத்துங்கள்
விலங்குகளிடத்தில் நபிகள் நாயகம் அதிக அக்கறை கொண்டிருந்தார். அவைகளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார்.
ஒரு முறை, நபிகள் நாயகம் ஒரு வழியில் சென்றபோது கயிற்றில் கட்டப்பட்டிருந்த ஒட்டகத்தைப் பார்த்துச் சென்றார். மீண்டும் அவ்வழியே வந்தபோது ஒட்டகத்தின் உரிமையாளரை பார்த்து "இந்த ஒட்டகத்திற்கு தீனி போட்டீரா?' என்று கேட்டதற்கு, அவர் "இல்லை' என்றார். ""அறிந்துகொள்ளும். நாளை கியாம நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் இந்த ஒட்டகம் வழக்காடும்,'' என்று எச்சரித்தார். ஆடு, மாடு, மற்றும் கால்நடைகளுக்கு துன்பம் செய்பவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகிறது. ஈயின் இறக்கைகளில் ஒன்றில் விஷமும் மற்றொன்றில் அவ்விஷத்திற்கு மருந்தும் உள்ளது. ஈ, உங்கள் பானம் உள்ள பாத்திரங்களில் விழும்போது மருந்துள்ள இறக்கையை மேல் துõக்கியும், விஷமுள்ள இறக்கையை (பானத்தில்) முக்கியவாறே விழும். ஆகவே நீங்கள் அவ்விரு இறக்கைகளையும் முக்கிய பின் வெளியே எடுத்து விடுங்கள்,'' என்ற தகவலையும் சொல்லியுள்ளார். அவர் ஆடுகள் பற்றி கூறும்போது, "" செம்மறி ஆடுளை அன்புடன் நடத்துங்கள். அவற்றை பாதுகாத்து வாருங்கள். ஏனென்றால் சொர்க்கத்தில் உள்ள நாலுகால் பிராணிகளில்அவையும் உள்ளன,'' என்றார்.
ஒரு மனிதன் ஒரு குருவியை அடித்தால் கூட, கியாம நாளில் அதைப்பற்றி விசாரணை செய்யப்படுவான். நீங்கள் ஒரு சிறிய சிட்டுக்குருவியின் மீது இரக்கம் காட்டுவீர்களானால் அல்லாஹ் உங்கள் மீது அன்பையும் அருளையும் பொழிவார். நீங்கள் சேவல் கூவுவதைக் காதில் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளை வேண்டுங்கள். ஏனென்றால் நிச்சயமாக அது (அந்த நேரம்) வானவரைக் கண்டுள்ளது. அதல்லாமல் நீங்கள் கழுதையின் சப்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு கேளுங்கள். ஏனென்றால் நிச்சயமாக அது ஷைத்தானைக் கண்டுள்ளது. எவராவது வீட்டில் நாயை வளர்ப்பாராயின், அவருடைய நன்மைகளில் ஒவ்வொரு தினமும் ஒரு கிராத் அளவு நன்மை குறைந்துவிடும். வேட்டைநாய் அல்லது வயல்களை காவல்புரியும் நாய் அல்லது கால்நடைகளை காவல் புரியும் நாய்களுக்கு இது பொருந்தாது.
மார்க்க விதிகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் எனக்கூறிய நாயகம், ""என்னுடைய உம்மத்தவர்களில் கருத்து வேற்றுமையும் பிரிவினைகளும் விரைவில் ஏற்படும். நல்ல வார்த்தைகளும் கெட்ட பழக்கங்களும் உடைய ஒரு கூட்டத்தினர் குர்ஆன் ஓதுவார்கள். அது அவர்களுடைய தொண்டையைக் கடக்காது. எய்யப்பட்ட பிராணியிலிருந்து வெளியேறும் அம்புபோல் அவர்கள் தங்களுடைய சன்மார்க்கத்திலிருந்து வெளியேறி வருவார்கள்,'' என்கிறார்.


Related

அமுத மொழிகள் 6025936906248550502

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item