உத்திஷ்ட உபாங்கபாதாசனம்--ஆசனம்,
செய்முறை: மல்லாந்து படுத்துக்கொண்டு இடது காலை நன்றாக மேலே உயர்த்த வேண்டும். வலது கால் தரையில் நீட்டியபடி இருக்க வேண்டும். உயர்த்திய...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_8938.html
செய்முறை:
மல்லாந்து
படுத்துக்கொண்டு இடது காலை நன்றாக மேலே உயர்த்த வேண்டும். வலது கால்
தரையில் நீட்டியபடி இருக்க வேண்டும். உயர்த்திய இடது காலைக் கொஞ்சம்
வளைத்து உயர்த்திய இடதுகாலின் பாதத்தை இரண்டு கைகளாலும் பற்றிக்கொள்ள
வேண்டும். இப்போது மூச்சை வெளியேற்றிவிட்டு, முகத்தையும் இடுப்பையும்
நிமிர்த்தி நெற்றியை இடது முழங்கால் முட்டியில் பொருத்தவேண்டும.
இந்த
நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். பின்னர் ஆசனத்தைக்
கலைத்துவிட்டு மல்லாந்து படுத்தபடியே சற்று இளைப்பாறிக் கொள்ளவேண்டும்.
இப்போது இடது காலை நீட்டியபடி வலது காலை உயர்த்தி இவ்வாசனத்தை செய்ய
வேண்டும்.. இப்படி 3 முறை செய்தால் போதும்.
பயன்கள்...
மலச்சிக்கல்,
கல்லீரல் தொல்லைகள், சிறுநீரகக் கோளாறுகள், சர்க்கரைநோய், நரம்புத்
தளர்ச்சி போன்ற உபாதைகள் உள்ளவர்கள், இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து
வந்தால் மேலே குறிப்பிட்டுள்ள எல்லா உபாதைகளும் இருந்த இடம் தெரியாமல்
மறைந்து போய்விடும். இரத்த அழுத்தமுள்ளவர்கள், இதயக்கோளாறுகள்
இருப்பவர்கள், கருவுற்ற பெண்கள், வயிற்றில் பெரிய ஆப்பரேசன் செய்துகொண்டு
மூன்று அல்லது நான்கு மாதகாலமாவது ஆகாதவர்கள் இவ்வாசனத்தை செய்ய வேண்டாம்.
Post a Comment