விஷக்கடி... விரட்டி அடி! --ஹெல்த் ஸ்பெஷல்,

விஷக்கடி... விரட்டி அடி! வி மானத்தில் ஒருவரை தேள் கொட்டியதால், அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்ட செய்தியை சமீபத்தில் படி...


விஷக்கடி... விரட்டி அடி!





விமானத்தில் ஒருவரை தேள் கொட்டியதால், அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்ட செய்தியை சமீபத்தில் படித்திருப்பீர்கள். பூரான், குளவி, தேனீ, தேள் போன்றவற்றால் கொட்டுப்படாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. குறிப்பாக நாட்டு ஓடு வேய்ந்த கூரைகள் உள்ள கிராமத்து வீடுகளில் இந்த ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். தேள்களின் குடியிருப்பே ஓடுகளுக்கு இடையில் உள்ள இடைவெளிகள்தான். அதேபோல் ஈரமும் - இருட்டும் இருக்கும் குளியல் அறைகள் என்றால் பூரான்களுக்குக் கொண்டாட்டம். குளவியும் தேனீயும் நகர்ப்புறங்களில்கூட நாம் பார்க்கக் கூடியன. எதிர்பாராத இடங்க ளில் இவை கூடு கட்டுவதும், அவற்றின் கூடுகளைக் கலைக்க நாம் முயலுவதும் அடிக்கடி நடப்பதுதான். இவை தீண்டினால் செய்ய வேண்டிய முதல் உதவிகளைப் பற்றியும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் கோயமுத்தூர் பொது மருத்துவர் வி.ஜனார்த்தனன் விவரித்தார்.
தேள்: பொதுவாகத் தேள் கொட்டுவதால் மிகவும் சீரியஸான விளைவுகள் இருக்காது என்றாலும், சில சமயங்களில் மிக ஆபத்தாகிவிடுவதும் உண்டு. தேள் கொட்டினால் வலியும் எரிச்சலும் தோன்றும். அந்தப் பகுதி மரத்துப்போவதும் உண்டு. நெறி கட்டுவதும் இருக்கும். சில சமயங்களில் உடல் முழுவதும் உணர்வற்ற நிலை, விழுங்குவதில் சிரமம், நாக்கு தடித்துப்போதல், பார்வை மங்குதல், சுழலுதல், எச்சில் ஒழுகுதல், மூச்சுவிடத் திணறுதல் போன்ற பாதிப்புகள் இருக்கும். உச்சக்கட்டமாக மரணம் நேரிடவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வது அவசியம். தேள் கொட்டிய இடத்தில் முள் குத்தியதைப் போன்ற அடையாளம் இருக்கும்.
தேள்களில் சுமார் 2,000 வகைகள் இருந்தாலும் 25 முதல் 40 வகையானவைதான் ஆபத்தானவை. விஷத்தன்மையும் தேளுக்கு தேள் மாறுபடும். ஒருவரை தேள் கொட்டிவிட்டால், அந்தப் பகுதியை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர் கொட்டுப்பட்ட இடத்துக்கு அருகில் மோதிரம், மெட்டி, வளையல் போன்ற ஆபரணங்கள் ஏதேனும் அணிந்திருந்தால், அவற்றை அகற்றிவிட வேண்டும். காரணம், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள திசுக்கள் வீங்க முடியாமல் போனால், ரத்த ஓட்டத்தைத் தடை செய்யக்கூடும். ஐஸ் கட்டிகளை 10 நிமிடங்கள் வைத்து லேசாக அழுத்தலாம். பின்னர் ஐஸ் கட்டியை எடுத்துவிட்டு, 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஐஸ் ஒத்தடம் தரலாம். வலி நிவாரணிகள் எதையும் பயன்படுத்தக் கூடாது. கொட்டுப்பட்ட இடத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் மட்டுமே, ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுக்கலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் கீறுவதோ, வாயை வைத்து உறிஞ்சுவதோ கூடாது.
கொட்டிய தேள் என்ன வகை என்று தெரிந்தால், சிகிச்சைக்கு அது உதவியாக இருக்கும். எனவே, கொட்டிய தேளை ஒரு டப்பாவில் போட்டு மருத்துவரிடம் காட்டலாம். தேள் கொட்டிவிட்டால் என்ன செய்வது என்பதைத் தெரிந்துகொள்வது எந்த அளவு முக்கியமோ, அதே அளவு தேள் கடியே ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.
துணிமணிகள், கை உறைகள் மற்றும் கால் உறைகள், ஷூக்கள் போன்றவற்றை அணிவதற்கு முன் நன்கு உதறிவிட்டுப் பயன்படுத்தினால் தேள் கடி ஏற்படாமல் தப்பலாம். தேள்களுக்கு இரையாகும் சிறு பூச்சிகள், கரப்பான், பல்லி போன்றவை வீட்டுக்குள் இல்லாமல் பார்த்துக்கொண்டால், தேளே வீட்டை நெருங்காது.
நம் உடம்பின் மீது தேள் ஊர்ந்துகொண்டு இருப்பதை உணர்ந்தால் உடனடியாக உதறித் தள்ள வேண்டுமே தவிர, உடம்போடு சேர்த்து தேளை அடிக்கக் கூடாது; ஏனெனில், உடம்பில் இருக்கும் தேளை அடித்தால், அது உடனடியாகக் கொட்டிவிடும். தோட்டங்களில் கற்களுக்கு அடியில் தேள்கள் இருக்கலாம். எனவே, கற்களைப் புரட்டும்போது கவனம் தேவை. இரவு நேரங்களில், காலணி அணியாமல் வெளியில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பூரான்:  பெரிய சைஸ் பூரான்கள் விஷத்தன்மைகொண்டவை. இவை கடித்தால், தலைவலி, மயக்கம், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். கடி வாயில் வீக்கமும் இருக்கும். உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்காவிட்டால், அது சீரியஸான விளைவுகளை ஏற்படுத்தும். ஐஸ் கட்டிகளை வைப்பதுதான் உடனடி முதல் உதவி.
குளவி: பொதுவாகக் குளவி கொட்டினால் வலி இருக்குமே தவிர, பெரிய ஆபத்து இல்லை. குளவி விஷம் ஒவ்வாமையை ஏற்படுத்தும். மூச்சுவிடுவதில் சிரமம், வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் வீக்கம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒன்றுக்கும் மேற்பட்ட குளவிகள் கொட்டிவிட்டால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும். கண்ணுக்கு அருகில் கொட்டி இருந்தால், கூடுதல் கவனம் தேவை. கொட்டிய இடத்தில் சீழ் வடிதல், நீர் ஒழுகுதல், கடிவாய் சிவந்து காணப்படுதல், அதிகமான வலி போன்றவை இருந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
கொட்டிய குளவியின் கூர்மையான முள் போன்ற உறுப்பு சில சமயம் தோலில் புதைந்திருக்கலாம். மருத்துவரின் உதவியோடு அதனை அகற்றிவிட வேண்டும்.
தேனீ: தேனீ கொட்டிய இடத்தை நன்கு கழுவி, கொட்டிய கொடுக்கு இருந்தால் அதை நீக்கி, ஐஸ்ஒத்தடம் கொடுப்பதே முதல் உதவி. டெட்டனஸ் ஊசி போட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தால், தேனீ கொட்டிய சில தினங்களுக்கு உள்ளாகவே அந்த ஊசியை மறுபடியும் போட்டுக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் கொட்டிய இடத்தில் தொற்று ஏற்பட்டுச் சீழ் பிடிக்கலாம். உடனடியாக மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.
குளவிக் கூடுகளையோ, தேன் கூட்டையோ தேவை இல்லாமல் கலைக்கக் கூடாது. பழ மரங்கள், பூந்தோட்டங்கள் நிறைந்த பகுதிகளில் தேனீ மற்றும் குளவிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, மேற்படி இடங்களுக்குச் செல்லும்போது அடர் வண்ணத்திலான ஆடைகள் அணிந்து செல்ல வேண்டாம்; வாசனைத் திரவியங்களையும் தவிர்க்க வேண்டும். முழுக்கை மற்றும் முழுக்கால் ஆடைகளுடன், தகுந்த காலணிகளையும் அணிந்து செல்வதே பாதுகாப்பானது.'

Related

ஹெல்த் ஸ்பெஷல் 3659853749529070214

Post a Comment

1 comment

suba said...

எங்கள் மரத்தில் தேனீ கூடு உள்ளது விடிய காலையில் விளக்கு வெளிச்சத்திற்கு அதிகமாக வருகின்றன எனவே எங்களையும் கொட்டுவதண்டு அதை விரட்ட வலி என்ன.இனிமே வராமல் இருப்பதற்கு என்ன செய்ய

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item