இறால் திதிப்பு---சமையல் குறிப்புகள்-அசைவம்!
இறால் திதிப்பு நல்ல ருசிக்காக ஏங்கும் நாக்குக்கு சொந்தக்காரர்கள் இறால் திதிப்பை செய்து ருசிக்கலாம். தொடர்ந்து இந்த ருசியிலேயே நீங்கள் சிக...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_8422.html
இறால் திதிப்பு
நல்ல ருசிக்காக ஏங்கும் நாக்குக்கு சொந்தக்காரர்கள் இறால் திதிப்பை செய்து ருசிக்கலாம். தொடர்ந்து இந்த ருசியிலேயே நீங்கள் சிக்கலாம். அப்படியொரு விடாத ருசி உங்களை பற்றிப்பிடித்துக் கொள்ளும். செய்து சுவைக்கலாமா?
தேவையான பொருட்கள்
தேங்காய் - கால் மூடி
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 4 கீறியது
இறால் - அரை கிலோ
சாம்பார் வெங்காயம் - கால் கிலோ நறுக்கியது
நாட்டுத்தக்காளி - கால் கிலோ நறுக்கியது
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு கரண்டி
இஞ்சி, பூண்டு - சிறிதளவு தட்டவும்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க
சோம்பு, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
இறாலைச் சுத்தம் செய்யவும். இஞ்சி, பூண்டு தட்டிக் கொள்ளவும். தேங்காய், சோம்பு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். அரைத்து வைத்த மசாலாவைச் சேர்க்கவும். மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் கலவையுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
மசாலா திக்காக வரும் சிறிது நீர் ஊற்றி கொதிக்க விடவும். குருமா பதத்தில் வரவும் இறாலைப்போடவும். இறால் வெந்தபிறகு பச்சைக்கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சிறிது கிள்ளிப்போட்டு இறக்கவும்.
இதே முறைப்படி நெத்திலி திதிப்பும் செய்யலாம்.
நல்ல ருசிக்காக ஏங்கும் நாக்குக்கு சொந்தக்காரர்கள் இறால் திதிப்பை செய்து ருசிக்கலாம். தொடர்ந்து இந்த ருசியிலேயே நீங்கள் சிக்கலாம். அப்படியொரு விடாத ருசி உங்களை பற்றிப்பிடித்துக் கொள்ளும். செய்து சுவைக்கலாமா?
தேவையான பொருட்கள்
தேங்காய் - கால் மூடி
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 4 கீறியது
இறால் - அரை கிலோ
சாம்பார் வெங்காயம் - கால் கிலோ நறுக்கியது
நாட்டுத்தக்காளி - கால் கிலோ நறுக்கியது
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு கரண்டி
இஞ்சி, பூண்டு - சிறிதளவு தட்டவும்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க
சோம்பு, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
இறாலைச் சுத்தம் செய்யவும். இஞ்சி, பூண்டு தட்டிக் கொள்ளவும். தேங்காய், சோம்பு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். அரைத்து வைத்த மசாலாவைச் சேர்க்கவும். மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் கலவையுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
மசாலா திக்காக வரும் சிறிது நீர் ஊற்றி கொதிக்க விடவும். குருமா பதத்தில் வரவும் இறாலைப்போடவும். இறால் வெந்தபிறகு பச்சைக்கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சிறிது கிள்ளிப்போட்டு இறக்கவும்.
இதே முறைப்படி நெத்திலி திதிப்பும் செய்யலாம்.
Post a Comment