இன்ஷ¨ரன்ஸ§க்கு ஆசைப்பட்டு...உங்களுக்கு உதவும் சட்டங்கள்
இன்ஷ¨ரன்ஸ§க்கு ஆசைப்பட்டு... பாதுகாப்புக்குப் பயன்படும் என்றுதான் இன்ஷ¨ரன்ஸ் எடுக்கிறோம்... ஆனால், அதில் கொஞ்சம் கவனம் பிசகிவிட் டால...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_7957.html
இன்ஷ¨ரன்ஸ§க்கு
ஆசைப்பட்டு...
பாதுகாப்புக்குப் பயன்படும் என்றுதான் இன்ஷ¨ரன்ஸ் எடுக்கிறோம்... ஆனால், அதில் கொஞ்சம் கவனம் பிசகிவிட் டாலும் நமக்கே வில்லங்கமாக முடிந்து விடும். அப்படி சில இன்ஷ¨ரன்ஸ் சிக்கல்கள் பற்றி இந்த இதழில்...
‘‘நல்ல கண்டிஷனான வண்டி... பார்ட்டி வெளி யூருக்கு மாற்றலாகி போவதால்தான் விற்கிறார். வாங்கிக் கறீங்களா?’’ என்றார் வந்தவர் ராகுலிடம். மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்த்த ராகுலுக்கு முழுத் திருப்தி.
‘‘பேப்பர் எல்லாம் சரியாக இருக் கிறதா?’’ என்று அதிமுக்கியமான கேள்வியைக் கேட்டார் ராகுல். ஏனென்றால் அவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக இருந்தார். அத னால் சட்டப்படி எல்லாம் சரி யாக இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளும் முயற்சியில் இறங்கினார்.
பேப்பரை எல்லாம் காட்டிய பார்ட்டி, ‘‘சார்... வண்டி மச்சான் பேரில் இருக்கு... இதோ அவர் எழுதிக் கொடுத்த சேல்ஸ் ஸ்லிப்... இந்த ஸ்லிப்பை வைத்து நீங்கள் வண்டியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்’’ என்றவர், மோட்டார் சைக்கிளுக்கான பணத்தை வாங்கிக்கொண்டு வண்டியைக் கொடுத்து விட்டார்.
ராகுலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குச் சென்று பெயர் மாற்றும் முயற்சியில் இறங்க, வண்டி நம்பரைப் பார்த்தவுடன் அந்த அதிகாரி, ‘‘என்ன தைரியம் இருந்தால் திருட்டு வண்டியை ரெஜிஸ்டர் பண்ண கொண்டு வருவே!’’ என்று சட்டையைப் பிடிக்க, ராகுலுக்கு அதிர்ச்சி.
விவரத்தைச் சொல்லி எஸ்கேப் ஆகி வண்டியை விற்றவரைப் பிடித்தார். ‘‘என்னய்யா... திருட்டு வண்டியை என் தலையில் கட்டப் பார்க்கிறியா?’’ என்றபடி ராகுல் அவரை விரட்ட, அவருக்கும் அதிர்ச்சி! இருங்க... என் மச்சானைக் கேட்கிறேன் என்று மச்சானுக்கு போன் போட... அவர் மழுப் பலாக பதில் சொல்ல, தப்பு அவரிடம்தான் என்பது புரிந்துபோனது.
பெங்களூருவில் வேலை பார்த்த மச்சான், அங்கு ஓட்டிக்கொண்டிருந்த தன் வண்டி காணா மல் போய்விட்டதாக புகார் கொடுத்துவிட்டு, வண்டியை மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டார். மச்சான் தானே என்பதால், இவரும் பெயர் மாற்றாமல் ஓட்டிக்கொண்டிருந் திருக்கிறார்.
அந்த எஃப்.ஐ.ஆ&ரை வைத்து இன்ஷ¨ரன்ஸ் க்ளைம் செய்து, அதை வைத்து புது வண்டி ஒன்றையும் வாங்கி விட்டார்!
நடந்த தில்லுமுல்லுகளை ராகுல் போலீஸிடம் கொண்டுபோக, இப்போது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்ஷ¨ரன்ஸ§க்கு ஆசைப்பட்டு தப்பு செய்தவர் நிலைமை இப்படி இருக்க, லீவுக்கு ஆசைப்பட்ட ஒரு மனிதர் இன்ஷ¨ரன்ஸ் விஷயத் தில் இழந்து நின்ற பரிதாபக் கதை இது!
அரசு ஊழியரான சுந்தரம் நல்ல திடகாத்திரமான உடல் வாகு கொண்டவர். நண்பர் ஒரு வரின் வற்புறுத்தலால் லட்ச ரூபாய்க்கு ஆயுள் இன்ஷ¨ரன்ஸ் பாலிசியை எடுத்தார். அந்த விண்ணப்பத்தில் வழக்கமான கேள்விகளான உடல் உபாதைகள் பற்றிய இடத்தில் தனக்கு எந்த நோயும் இல்லை என்பதைக் குறிப்பிட்டார். உண்மையும் அதுதான்!
சுந்தரத்துக்கு நோய் எதுவும் கிடையாது, ஆனால், அடிக்கடி லீவ் எடுக்கும் கெட்டபழக்கம் இருந்தது. இன்ஷ¨ரன்ஸ் எடுத்த ஓராண்டில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, உயிர் பிரிந்துவிட்டது.
எல்லா காரியங்களும் முடிந்தபிறகு அவருடைய குடும்பத்தினர் இன்ஷ¨ ரன்ஸ் க்ளைம் வாங்கு வதற்கு விண்ணப்பித் தனர். பாலிசி எடுத்து ஓராண்டுக்குள் க்ளைம் என் பதால் விசாரணையில் இறங்கியது இன்ஷ¨ரன்ஸ் கம்பெனி. சம்பிரதாயமாக அலுவலகத்தில் விசாரித்த போது சுந்தரம் அடிக்கடி விடுமுறை எடுப்பார் என்ற தகவல் தெரிந்திருக்கிறது. அவருடைய விடுமுறை விண்ணப்பங்களைப் பரிசோதித்தபோது, பாலிசி எடுப்பதற்கு ஒருமாதத்துக்கு முன்பாக நெஞ்சுவலி என்ற காரணத்துக்காக சுந்தரம் 15 நாட்கள் விடுமுறை எடுத்திருந்தார். அதற்கான மருத்துவச் சான்றிதழையும் சமர்ப்பித்திருந்தார்.
உண்மையில் நண்பர் திருமணத்துக்காக விடுமுறை எடுத்த சுந்தரம், போலியாக மருத்துவச் சான்றிதழ் கொடுத்து விடுப்பு எடுத்திருந்தார். ஆனால், சுந்தரம் தனக்கு ஏற்கெனவே இருந்த நெஞ்சுவலியை மறைத்து பாலிசி எடுத்து நிறுவனத்தை ஏமாற்றிவிட்டதாகக் காரணம் காட்டி, க்ளைம் தர மறுத்துவிட்டது இன்ஷ¨ரன்ஸ் நிர்வாகம்.
எவ்வளவோ போராடியும் பலனில்லை. விளையாட்டு எத்தனை வினையாகிவிட்டது பார்த்தீர்களா?!
இந்தச் சம்பவங்கள் குறித்து விளக்கம் தருகிறார், யுனைடெட் இந்தியா இன்ஷ¨ரன்ஸின் பொதுமேலாளர் வி.சேகர்.
‘‘பொதுவாக வாகனங்களை யாரிட மிருந்து வாங்கினாலும், உடனே அந்த வாகனத்தின் மீதான உரிமை மாற்றம் (Ownership Transfer) குறித்த விஷயங் களில் மிகக் கவனமாக இருக்க வேண் டும். இதில், தனது மைத்துனரிட மிருந்து வண்டியை வாங்கியவர், அப்போதே பெயர் மாற்றம் செய்திருந்தால் அந்த மோசடி அப்போதே அம்பலமாகி இருக்கும். இந்தப் பிரச்னையும் ஏற்பட்டிருக்காது. உறவின ராக இருந்தாலும் கூட, எந்தப் பொருளை வாங்கினாலும், அதன் உரிமை குறித்த செயல்பாடுகளை முறையாகப் பின்பற்றினால் எந்தப் பிரச்னையும் வராது.
அடுத்ததில் சுந்தரம் மிக அலட்சியமாக இருந்த தால் அவர் இன்ஷ¨ரன்ஸ் பாலிசி எடுத்தும் பயனற்றுப் போய் விட்டது. பாவம் அவரது குடும்பம். இந்த கேஸில் வேறு என்ன சொல்ல இருக்கிறது!
Post a Comment