பயமே விஷம் ஆகலாமா? --உபயோகமான தகவல்கள்

பயமே விஷம் ஆகலாமா? 'ஒ ரு விஷயம் தெரியுமா? பாம்பு கடித்த ஒருவர் அதன் விஷத்தால் பாதிக்கப்படுவதைக் காட்...

பயமே விஷம் ஆகலாமா?


'ஒரு விஷயம் தெரியுமா? பாம்பு கடித்த ஒருவர் அதன் விஷத்தால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் 'பாம்பு கடித்துவிட்டதே’ என்ற அதிர்ச்சி காரணமாகப் பாதிப்படைகின்ற நிகழ்வுகளே இங்கு அதிகம்.
ஆம், எல்லாப் பாம்புகளுமே விஷத்தன்மை கொண்டவை அல்ல. இந்தியாவில் காணப்படும் சுமார் 200 வகைப் பாம்புகளில் நச்சுத்தன்மை கொண்டவை வெறும் 52 வகை மட்டுமே. தமிழ்நாட்டில் உள்ள பாம்புகளில் கட்டு விரியன், கண்ணாடி விரியன், ரம்பச் செதில் கொண்ட விரியன், நாகப் பாம்பு, பவழப் பாம்பு, ராஜநாகம் போன்றவைதான் கொடிய விஷம் கொண்டவை.
கடித்த பாம்பைப் பொருத்து பாதிப்பு ஏற்படும். உரிய தருணத்தில் சரியான முதல் உதவி அளிக்கப்படாததால் இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கின்றன. பாம்பு கடித்தவர்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய முதல் உதவிகள்பற்றி பொது மருத்துவர் டாக்டர் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.
''ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் டாக்டர்?''
''கடிபட்ட இடத்தில் கடுமையான வலி மற்றும் வீக்கம், ரத்தம் வடிதல், எரிச்சல், பேதியாகுதல், அதிக அளவில் வியர்ப்பது, கண் பார்வை மங்குவது, கை - கால்கள் மரத்துப்போவது, தாகம், வாந்தி, காய்ச்சல், தசைகள் கட்டுப்பாட்டை இழப்பது, வலிப்பு, நாடித் துடிப்பு தாறுமாறாக எகிறுவது, சோர்வு, மயக்கம் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட அறிகுறிகள் ஏற்படலாம்.''
''ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்குச் செய்ய வேண்டிய முதல் உதவிகளைப் பற்றிச் சொல்லுங்களேன்?'
''கடிபட்டவரைச் சுற்றிக் கூட்டம் போட்டுக் காற்றோட்டத்தைத் தடுக்கக் கூடாது. கடிபட்டவர் சுய நினைவோடு இருக்கும்பட்சத்தில், அவருக்கு ஆறுதல் மற்றும் தைரியம் அளிக்கும் வகையில் பேச்சு கொடுக்கலாம்.
பாம்பு கடித்த இடத்தில் அதனுடைய பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்தப் பகுதியைச் சுத்தமான தண்ணீரினால் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். கடிபட்ட இடத்தைச் சற்றுத் தூக்கி உயரமாக வைத்திருக்க வேண்டும். காயத்துக்கு இரண்டு முதல் நான்கு அங்குலம் மேலாக உள்ள பகுதியில், ஈரமானத் துணியைக்கொண்டு அழுத்திக் கட்டு போட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் காயத்தின் மீது மஞ்சள் போன்ற பொருட்களைப் பூசக் கூடாது. கடிபட்ட இடத்தை அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதைவிடுத்து, சினிமாக்களில் காட்டப்படுவதைப் போலக் கடிவாயில் வாயை வைத்து விஷத்தை உறியக்கூடாது. கூரிய ஆயுதங்கள் மூலம் கடிபட்ட இடத்தைக் கீறவும் கூடாது. ஏனென்றால், காயத்தை வைத்துதான் எந்த வகை பாம்பு கடித்துள்ளது, கடி ஆழமாக இருக்கிறதா, கீறலா என்பதை எல்லாம் அறிந்துகொள்ள வேண்டும்'' என்று விவரித்தார் டாக்டர் ஸ்ரீனிவாசன்.
''பொதுவாக காடுகளை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்களும் ட்ரெக்கிங் செல்பவர்களும் பாம்புக் கடிக்கு அதிகமாக ஆளாகிறார்கள். பாம்புக் கடியைத் தவிர்க்க எச்சரிக்கையாக இருப்பது எப்படி?' என்று தமிழ்நாடு வனப் பயிற்சிக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் பெருமாளிடம் கேட்டோம்.
''ட்ரெக்கிங் போகும் சமயத்தில், குழிகளுக்குள்ளோ மரப் பொந்துகளுக்குள்ளோ கை கால்களை விடக் கூடாது. உயரமான புற்களுக்கிடையில் நடப்பதைத் தவிர்க்கலாம். பாறைகளுக்கிடையிலும் பாம்புகள் இருக்கும் என்பதை மறக்கக் கூடாது. இரவில் நடமாடும்போது கையில் டார்ச் விளக்குடன் செல்வது நல்லது' என்றார்.
நாட்டு வைத்தியர்கள், பாம்புக்கடிக்கு முதல் உதவியாகச் 'சர்ப்ப கந்தி’ என்னும் மூலிகையின் வேரைப் பொடி செய்து உட்கொள்ளக் கொடுப்பார்கள். ''பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் ஆழியாறு வன மரபியல் பூங்காவில், இந்தச் செடிகள் விலைக்குக் கிடைக்கின்றன. விலை 3 ரூபாயில் இருந்து 10 ரூபாய்க்குள்தான். வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்கலாம். சர்ப்ப கந்திச் செடியின் வேரை வால்மிளகுடன் சேர்த்துப் பொடி செய்து கடிவாயின் மேல் தடவுவதோடு, உட்கொள்ளவும் கொடுக்கலாம்'' என்கிறார் மூலிகை வளர்ப்பில் அனுபவம் மிக்கவரான ஷாஜஹான்.
வீடு மற்றும் தோட்டங்களில் இருக்கும் பல விதமான பாம்புகளையும் பிடித்து வனப் பகுதியில் விடுவதில், ஊட்டியைச் சேர்ந்த சாதிக் வல்லுநர். 'ஸ்னேக் சாதிக்’ என்றால், ஊட்டியில் எல்லோருக்கும் தெரியும். அவருடைய அனுபவம் இது:
''நான் பாம்புகளைப் பிடிக்கப் போகும்போது ஹோமியோபதி மருந்து ஒன்றையும் கையில் வைத்திருப்பேன். யாரையாவது பாம்பு கடித்திருந்தால், கடித்த இடத்தில் இந்த மருந்தின் சில துளிகளை வைப்பதோடு, அரை டம்ளர் தண்ணீரில் பத்து சொட்டுக்கள் இந்த மருந்தைவிட்டு மணிக்கு ஒரு முறை குடிக்கவும் கொடுப்பேன். விஷத்தின் பாதிப்புக்குச் செய்யப்படும் இந்த முதலுதவி மிகவும் பலன் தரும். அனுபவம் இல்லாமல் பாம்பு பிடிக்கப் போகாதீர்கள். பாம்பிடம் இருந்து குறைந்தது 15 அடி தூரத்தில் இருங்கள். சாக்குப் பைக்குள் இருந்தபடியேகூடச் சில பாம்புகள் கடிக்கும் என்பதை மறக்காதீர்கள்'' என எச்சரிக்கிறார் சாதிக்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 3506750654802261255

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item