சீறுநீரகம் காக்கும் சிறுநெருஞ்சில்...மூலிகைகள் கீரைகள்,
நெருஞ்சிலின் சமூலம் (இலை, கொடி, காய், பூ விதை) அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. மருத்துவ பயன்கள் கண் நோய் பாதிப்பு நீங்க: நெருஞ்சில் சம...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_1777.html
நெருஞ்சிலின் சமூலம் (இலை, கொடி, காய், பூ விதை) அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
மருத்துவ பயன்கள்
கண் நோய் பாதிப்பு நீங்க:
நெருஞ்சில் சமூலம் ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன் அருகம்புல் ஒரு கைப்பிடி சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை கால் லிட்டராக வற்றக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என இரு வேளையும் 50 மி.லி. அளவு அருந்தி வந்தால் கண் படலம், கண்ணில் நீர்வடிதல், கண்புகைச்சல், கண் நரம்புகளின் வறட்சி போன்றவை குணமாகும்.
சிறுநீர் தொந்தரவுகள் நீங்க
சிறு நெருஞ்சிக்காய் 68 கிராம் எடுத்து இடித்து அதனுடன் கொத்தமல்லி விதை 8 கிராம் சேர்த்து 700 மி.லி. நீர் சேர்த்து சுண்டக்காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 40 மி.லி. அளவு அருந்தி வந்தால் சிறுநீரக கல்லடைப்பு, நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் நீங்கும்.
சிறு நெருஞ்சில் சமூலத்துடன், கீழாநெல்லி சமூலம் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து மோரில் கலந்து உணவு இடைவேளைக்கு இடையில் அருந்தி வந்தால் நீர் தாரை எரிச்சல், சிறுநீர்க்கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு, போன்றவை குணமாகும்.
சிறுநெருஞ்சில் சமூலத்தை இடித்து சாறு பிழிந்து 30 மி.லி. அளவு எடுத்து அதனுடன் மோர் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் சிறுநீருடன் கலந்து இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.
மேலும், இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீரைவெளியேற்றும். சிறுநீரக கல்லடைப்பைத் தடுக்கும். நீர்க்கடுப்பு, நீர் தாரை எரிச்சல் போன்றவை நீங்கும்.
பெண்களுக்கு கருப்பை நோய்கள் நீங்க
சிறு நெருஞ்சில் சமூலத்தை எடுத்து இடித்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி வடிகட்டி, ஆறிய பின்பு தேன் கலந்து அருந்தி வந்தால் பெண்களின் கருப்பை நன்கு வளர்ச்சியடையும். கருப்பை கட்டி வராமல் தடுக்கும். மோருக்கு பதிலாக இளநீரிலும் கலந்து அருந்தலாம்.
வெள்ளைபடுதல் மாற
சிறு நெருஞ்சில் காயையும், வேரையும் பச்சரிசியோடு சேர்த்து வேகவைத்து கஞ்சியை வடித்து பனைவெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டான வெள்ளைபடுதல், மாதவிலக்கு தொந்தரவு போன்றவை நீங்கும்.
சிறு நெருஞ்சில் சமூலம் - 10 கிராம்
சுக்கு - 5 கிராம்
மிளகு - 5 கிராம்
திப்பிலி - 5 கிராம்
இலவங்கம் - 4 கிராம்
ஏலக்காய் - 3
சாதிக்காய் - 4
மூங்கில் அரிசி - 5 கிராம்
என இவற்றை எடுத்து இடித்து பொடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை அரை லிட்டராக மாற்றி, 50 மி.லி. தினமும் காலை வேளையில் அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும். சிறுநீர் நன்கு வெளியேறும். சிறுநீரக நோய்கள் ஏதும் உண்டாகாது.
தாது விருத்திக்கு
நெருஞ்சில் வித்து, சமூலம், இவற்றை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஒரு ஸ்பூன் எடுத்து இளநீரில் கலந்து அருந்தி வந்தால் தாதுவை விருத்தி செய்யும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். வியர்வைப் பெருக்கி உடலில் உள்ள தேவையற்ற நச்சு நீர்களை வெளியேற்றும்.
இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்களைப் பிரிக்கும். இரத்தத்தின் கடினத்தன்மையைக் குறைத்து, இரத்த நாளங்களில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைப் பிரித்து வெளியேற்றும். உடல் சூட்டைத் தணிக்கும். ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும்.
சிறு நெருஞ்சில் நம் காலில் குத்துவதை எண்ணி அதை ஒதுக்கி விடாதீர்கள். இதனை களையாக நினைத்து அகற்றி விடாமல் அதன் மருத்துவப் பயனை முழுமையாக பயன்படுத்தி நீண்ட ஆரோக்கியம் பெறுவோம்.
மருத்துவ பயன்கள்
கண் நோய் பாதிப்பு நீங்க:
நெருஞ்சில் சமூலம் ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன் அருகம்புல் ஒரு கைப்பிடி சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை கால் லிட்டராக வற்றக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என இரு வேளையும் 50 மி.லி. அளவு அருந்தி வந்தால் கண் படலம், கண்ணில் நீர்வடிதல், கண்புகைச்சல், கண் நரம்புகளின் வறட்சி போன்றவை குணமாகும்.
சிறுநீர் தொந்தரவுகள் நீங்க
சிறு நெருஞ்சிக்காய் 68 கிராம் எடுத்து இடித்து அதனுடன் கொத்தமல்லி விதை 8 கிராம் சேர்த்து 700 மி.லி. நீர் சேர்த்து சுண்டக்காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 40 மி.லி. அளவு அருந்தி வந்தால் சிறுநீரக கல்லடைப்பு, நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் நீங்கும்.
சிறு நெருஞ்சில் சமூலத்துடன், கீழாநெல்லி சமூலம் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து மோரில் கலந்து உணவு இடைவேளைக்கு இடையில் அருந்தி வந்தால் நீர் தாரை எரிச்சல், சிறுநீர்க்கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு, போன்றவை குணமாகும்.
சிறுநெருஞ்சில் சமூலத்தை இடித்து சாறு பிழிந்து 30 மி.லி. அளவு எடுத்து அதனுடன் மோர் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் சிறுநீருடன் கலந்து இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.
மேலும், இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீரைவெளியேற்றும். சிறுநீரக கல்லடைப்பைத் தடுக்கும். நீர்க்கடுப்பு, நீர் தாரை எரிச்சல் போன்றவை நீங்கும்.
பெண்களுக்கு கருப்பை நோய்கள் நீங்க
சிறு நெருஞ்சில் சமூலத்தை எடுத்து இடித்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி வடிகட்டி, ஆறிய பின்பு தேன் கலந்து அருந்தி வந்தால் பெண்களின் கருப்பை நன்கு வளர்ச்சியடையும். கருப்பை கட்டி வராமல் தடுக்கும். மோருக்கு பதிலாக இளநீரிலும் கலந்து அருந்தலாம்.
வெள்ளைபடுதல் மாற
சிறு நெருஞ்சில் காயையும், வேரையும் பச்சரிசியோடு சேர்த்து வேகவைத்து கஞ்சியை வடித்து பனைவெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டான வெள்ளைபடுதல், மாதவிலக்கு தொந்தரவு போன்றவை நீங்கும்.
சிறு நெருஞ்சில் சமூலம் - 10 கிராம்
சுக்கு - 5 கிராம்
மிளகு - 5 கிராம்
திப்பிலி - 5 கிராம்
இலவங்கம் - 4 கிராம்
ஏலக்காய் - 3
சாதிக்காய் - 4
மூங்கில் அரிசி - 5 கிராம்
என இவற்றை எடுத்து இடித்து பொடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை அரை லிட்டராக மாற்றி, 50 மி.லி. தினமும் காலை வேளையில் அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும். சிறுநீர் நன்கு வெளியேறும். சிறுநீரக நோய்கள் ஏதும் உண்டாகாது.
தாது விருத்திக்கு
நெருஞ்சில் வித்து, சமூலம், இவற்றை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஒரு ஸ்பூன் எடுத்து இளநீரில் கலந்து அருந்தி வந்தால் தாதுவை விருத்தி செய்யும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். வியர்வைப் பெருக்கி உடலில் உள்ள தேவையற்ற நச்சு நீர்களை வெளியேற்றும்.
இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்களைப் பிரிக்கும். இரத்தத்தின் கடினத்தன்மையைக் குறைத்து, இரத்த நாளங்களில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைப் பிரித்து வெளியேற்றும். உடல் சூட்டைத் தணிக்கும். ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும்.
சிறு நெருஞ்சில் நம் காலில் குத்துவதை எண்ணி அதை ஒதுக்கி விடாதீர்கள். இதனை களையாக நினைத்து அகற்றி விடாமல் அதன் மருத்துவப் பயனை முழுமையாக பயன்படுத்தி நீண்ட ஆரோக்கியம் பெறுவோம்.
Post a Comment