3 வசனங்கள்! ---அமுத மொழிகள்

3 வசனங்கள்! அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காலத்தில், இறையாலயமாம் பள...

3 வசனங்கள்!

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காலத்தில், இறையாலயமாம் பள்ளி வாசலில், ஏழை - எளியவர்களின் தேவைக்காக ஒருபுறம் கோதுமைக் குவியலும், இன்னொருபுறம் பேரீச்சம் பழங்களின் குவியலும், பிறிதொருபுறம் ஆலிவ் எண்ணெய் நிறைந்த டீப்பாயும் காணப்பட்டன. மக்கள் சிந்தாமல் சிதறாமல் எடுத்துக் கொள்வதற்காக தம் தோழர்களில் ஒருவரை அப்பொருளின் பாதுகாவலராகவும் நியமித்திருந்தார்.இரவு நேரம்! விளக்குகள் அணைந்ததால் கருப்புப் போர்வை போர்த்திக்கொண்டு ஓர் உருவம் அங்கே வந்து குவித்து வைத்திருந்த பொருள்களை அள்ளிக் கொண்டது. காவலர் ""யார் நீ?'' என்று கேட்க, ""நான் கடுமையான பசியால் பாதிக்கப்பட்டவன். அதனால் எடுத்துக்கொண்டேன்'' என்றது.பகலில் அண்ணலாரிடம் இதைக் கூறினார் காவலர். அப்போது அண்ணலார் கூறியது போல் அடுத்த இரவிலும் அந்தக் கரிய உருவம் வந்தது. காவலர் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, ""என் குடும்பத்தினர் பசியில் இருக்கிறார்கள்'' என்று சொன்ன அந்த உருவம் மீண்டும் பொருள்களை அள்ளிச் சென்றது. அதன்பின் மூன்றாவது நாளும் அந்த உருவம் வர, அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் காவலர். திமிறிய அந்த உருவம், ""உங்களுக்கு திருக்குர் ஆனிலுள்ள மூன்று வசனங்களைக் கற்றுத் தருகிறேன். அதை ஓதி வந்தால் அச்சம், கவலை, பதற்றம் முதலிய இன்னல்கள் இல்லாமல் நீங்கள் வாழ்வீர்கள்'' என்று சொல்லி திருமறையின் 2:155, 2:185, 2:186 ஆகிய வசனங்களை ஓதிக் காட்டியது.அடுத்த நாள் அண்ணலாரிடம், நடந்த நிகழ்வைப் பற்றி காவலர் கூற, ""அவன் ஒரு பொய்யன்; ஆனால் அவன் ஓதிக்காட்டிய குர்ஆன் வசனங்கள் உண்மையானவை'' என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அந்த மூன்று வசனங்களின் பொருளை இங்கே காண்போம்:""அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயகன் வேறு எவருமிலர். அவன் என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனை அரி துயிலோ உறக்கமோ பீடிக்கா. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி எவரும் அவனிடம் பரிந்துரை செய்ய இயலாது.படைப்பினங்களுக்கு முன்னுள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னுள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும் அவன் நாட்டமின்றி எவரும் அறிந்துகொள்ள இயலாது. அவனுடைய சிம்மாசனம் வானங்களிலும் பூமியிலும் எங்கும் பரந்து காணப்படுகிறது''.""இறைத்தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்புகிறார். அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், வேதங்களையும், தூதர்களையும் நம்புகிறார்கள். நாம் இறைத்தூதர்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை. நாங்கள் ஆணைகளுக்கு செவிமடுத்தோம். வழிபட்டோம். எங்கள் இறைவா! எங்கள் இறைவா! உன்னிடமே மன்னிப்பு கோருகின்றோம்; மீள்வதும் உன்னிடமே''""அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குத் துன்பத்தைக் கொடுப்பதில்லை; எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் தவறு செய்திருப்பினும் எங்களை குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றவர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக''.இம்மூன்று வசனங்களை நினைவுபடுத்திய அந்தக் கருப்பு உருவம் யார் தெரியுமா? மனித குலப் பகைவனான ஷைத்தான்தான். எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சி நம் கவலை, துன்பம், அச்சம் நீங்கி வாழ்வோமாக!

Related

அமுத மொழிகள் 5099618667486949403

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item