வெந்தயக்கீரை உணவுகள்--சமையல் குறிப்புகள்,
வெந்தயக்கீரை உணவுகள் வெந்தயக்கீரை சூப் தேவை வெந்தயக்கீரை – 1 கைபிடி (பொடியாக நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) வெங்காயம் (பெரியது) – 2 (...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_2691.html
வெந்தயக்கீரை உணவுகள்
வெந்தயக்கீரை சூப்
தேவை
வெந்தயக்கீரை – 1 கைபிடி (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
வெங்காயம் (பெரியது) – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
பால் – 1 கப்
சோளமாவு – 1 டே.ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
நெய் (அ) எண்ணெய் – 1 டே.ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பாத்திரத்தை அடுப்பலிட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இட்டு வதக்கவும்.
பின்னர் சோளமாவைப் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கீரையை அதனுடன் சேர்த்து வேக விடவும்.
எல்லாம் வெந்தவுடன் அதில் பாலை சேர்த்து பின்னர், உப்பு, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.
வெந்தயக்கீரை சப்பாத்தி
தேவை
கோதுமை மாவு – 2 கப்
வெந்தயக்கீரை – 2 கட்டு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிது
சீரகம் – 1 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மாவில் போடவும். அதனுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து தயிர் சேர்த்து பிசைந்து மாவில் சப்பாத்தி இட்டு தோசைக்கல்லில் போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.
வெந்தயக்கீரை குழம்பு
தேவை
புளி – எலுமிச்சை அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
சிறிய வெங்காயம் – 200 கிராம்
வெந்தயக்கீரை – 2 கட்டு
தக்காளி – 2 பெரியது
தேங்காய்துருவல் – 3 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
கீரையை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி ஆகியவற்றை அரிந்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலும் சீரகம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காயைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதித்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.
வெந்தயக்கீரை சூப்
தேவை
வெந்தயக்கீரை – 1 கைபிடி (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
வெங்காயம் (பெரியது) – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
பால் – 1 கப்
சோளமாவு – 1 டே.ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
நெய் (அ) எண்ணெய் – 1 டே.ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பாத்திரத்தை அடுப்பலிட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இட்டு வதக்கவும்.
பின்னர் சோளமாவைப் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கீரையை அதனுடன் சேர்த்து வேக விடவும்.
எல்லாம் வெந்தவுடன் அதில் பாலை சேர்த்து பின்னர், உப்பு, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.
வெந்தயக்கீரை சப்பாத்தி
தேவை
கோதுமை மாவு – 2 கப்
வெந்தயக்கீரை – 2 கட்டு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிது
சீரகம் – 1 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மாவில் போடவும். அதனுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து தயிர் சேர்த்து பிசைந்து மாவில் சப்பாத்தி இட்டு தோசைக்கல்லில் போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.
வெந்தயக்கீரை குழம்பு
தேவை
புளி – எலுமிச்சை அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
சிறிய வெங்காயம் – 200 கிராம்
வெந்தயக்கீரை – 2 கட்டு
தக்காளி – 2 பெரியது
தேங்காய்துருவல் – 3 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
கீரையை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி ஆகியவற்றை அரிந்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலும் சீரகம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காயைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதித்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.
Post a Comment