மருத்துவக் காப்பீடு---இன்ஷூரன்ஸ்,
மருத்துவக் காப்பீடு மருத்துவக் காப்பீடுபற்றி தேவையான விஷயங்களை அலசி ஆராய்ந்துவிட்டோம். இனி பாலிசி எடுக்க வேண்டியது ஒன்றுதான் பாக்கி. ஆனா...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_2634.html
மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீடுபற்றி தேவையான விஷயங்களை அலசி ஆராய்ந்துவிட்டோம். இனி பாலிசி எடுக்க வேண்டியது ஒன்றுதான் பாக்கி. ஆனால், பாலிசி எடுக்க யோசிக்கும்பட்சத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது. கடந்த பல வருடங்களாக பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள்தான் மருத்துவக் காப்பீட்டை அளித்துவந்தன. இப்போது மருத்துவக் காப்பீடு மட்டுமே வழங்கும் பிரத்யேக மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் வந்துவிட்டன. இவை தவிர, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் மருத்துவக் காப்பீடு சேவையை அளித்துவருகின்றன. இவற்றில் எதைத் தேர்வு செய்வது?
மருத்துவக் காப்பீடு மட்டுமே கொடுக்கும் நிறுவனங்களில் மருத்துவக் காப்பீட்டை எடுக்கலாம், பிரச்னை இல்லை. அதைப் பற்றி விவாதிக்கவே தேவை இல்லை.
இது தவிர, பொதுக் காப்பீட்டு நிறுவனம் வழங்கும் பாலிசியை எடுப்பதா அல்லது ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வழங்கும் பாலிசியை எடுப்பதா? எது பெஸ்ட் என்று பார்ப்பதற்கு முன்பு இரண்டிலும் இருக்கும் சில சாதக பாதகங்களைப் பார்க்கலாமா...
ஆயுள் காப்பீடு
ஒவ்வோர் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் ஒவ்வொருவிதமாக பாலிசிகளை வழங்குகின்றன. சில நிறுவனங்கள் யூலிப் பாலிசியுடன் (முதலீட்டு திட்டம்) சேர்ந்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகின்றன. முதலீட்டுத் திட்டம் என்பதால், முதிர்வுத் தொகை கிடைக்கும். இது தவிர, 'கிரிட்டிக்கல் இல்னெஸ்’ எனப்படும் முக்கியமான நோய்களுக்கு மட்டுமே க்ளைம் கிடைக்கும் பாலிசிகளையும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. அதுவும் எந்தெந்த நோய்களுக்கு க்ளைம் உண்டு என்ற பட்டியல் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் வேறுபடும். டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட சில நோய்களுக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் க்ளைம் பெற முடியாது. மேலும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் இருக்கும் இந்த பாலிசியை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாற்ற முடியாது. இதில் ஒரு நன்மையும் இருக்கிறது. நீங்கள் எவ்வளவு தொகைக்குப் பாலிசி எடுத்திருந்தாலும் நோய் இருப்பது உண்மையானால், நீங்கள் பாலிசி எடுத்த தொகை அப்படியே முழுமையாக உங்களுக்குக் கிடைத்துவிடும். ஆனால், அந்த பாலிசியை அதன் பிறகு பயன்படுத்த முடியாது. அதாவது ரூ. 1 லட்சம் பாலிசி எடுத்திருந்து, 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகி இருந்தாலும், முழுத் தொகையான ரூ. 1 லட்சத்தையும் கொடுத்துவிடுவார்கள்.
பொதுக் காப்பீடு
பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் மருத்துவக் காப்பீட்டில், ஏற்கெனவே இருக்கும் நோய்கள், குறிப்பிட்ட சில நோய்கள் தவிர அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். நாம் பாலிசி எடுத்துள்ள நிறுவனத்தின் சேவை நமக்குப் பிடிக்கவில்லை என்றால், வேறு ஒரு நிறுவனத்துக்கு மாறிவிடலாம். பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பாலிசியில் செலவு செய்த தொகைக்கு மட்டுமே க்ளைம் கிடைக்கும். நாம் செலவு செய்த தொகைக்கு மட்டுமே க்ளைம் வாங்குவதால், அந்த பாலிசியானது தொடர்ந்து இருக்கும். ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் வசூலிக்கப்படும் ப்ரீமியத்தைவிட பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் ப்ரீமியம் கொஞ்சம் குறைவு.
என்ன செய்யலாம்?
பொதுக் காப்பீடு - ஆயுள் காப்பீடு இரண்டு நிறுவனங்களுமே ப்ரீமியத்துக்கான வரிவிலக்கு, ஃப்ளோட்டர் பாலிசி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் வழங்குகின்றன. இருந்தாலும் மருத்துவக் காப்பீடு மட்டும் வழங்கும் நிறுவனம் அல்லது பொதுக் காப்பீடு வழங்கும் நிறுவனங்களில் ஹெல்த் பாலிசி எடுப்பதே நல்லது.
பொதுவாக ஹெல்த் பாலிசி எடுப்பதன் நோக்கமே அனைத்து வகையான நோய்களில் இருந்தும் நம்மைத் தற்காத்துக்கொள்ளத்தான். ஆனால், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் கொடுக்கப்படும் பாலிசிகளில் அந்த நோக்கமே நிறைவேறாதபோது, அங்கு பாலிசி எடுப்பதுபற்றி யோசிக்க வேண்டும். பொதுக் காப்பீட்டு நிறுவன பாலிசியில், நாம் ஏற்கெனவே அனுபவித்துவந்த சலுகைகளைக் குறைத்துக்கொள்ளாமல் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாற முடியும்.
அதனால், முதல்முதலாக பாலிசி எடுப்பவர்கள் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை நாடுவது சிறந்தது. இந்த கவரேஜ் போதாது என்றால் மட்டுமே, கிரிடிகல் இல்னெஸ் பாலிசி போன்று ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பாலிசியை எடுக்கலாம். அதுகூட இப்போது தேவை இல்லை. பொதுக் காப்பீட்டு நிறுவனங்களே டாப்-அப் பாலிசியையும் வழங்குகிறார்கள்.
உங்களுக்கு எது முதலில் தேவை என்பதை நீங்களே முடிவெடுங்கள்!
காப்பீடு ஒரு முதலீடா?
'இந்த பாலிசியில் பணம் செலுத்தினால், எனக்கு என்ன திரும்ப கிடைக்கும்?’ என்ற எதிர்பார்ப்பு காப்பீடு விஷயத்தில் சரிப்பட்டு வராது. ஏனெனில், அசாதாரண சூழ்நிலைகளில் நமக்கு ஏற்படும் பண இழப்பைச் சரிகட்டுவதுதான் காப்பீட்டின் முக்கிய நோக்கம். 'நம் மறைவுக்குப் பிறகு நம் குடும்பத்துக்கு நிரந்தர வருமானம் கொடுக்க ஒரு டேர்ம் பாலிசி, உடல் நலக் குறைபாடுகளில் இருந்து குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்ற ஒரு மருத்துவக் காப்பீடு’ இவை இரண்டும்தான் முக்கியமே தவிர, முதலீட்டுக்கான ஒரு வாய்ப்பாக காப்பீட்டைப் பார்க்கத் தேவை இல்லை. முதலீட்டுக்கான வழிகள் ஆயிரம் இருக்கின்றன என்பதைத் தெளிவாக மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.
மருத்துவக் காப்பீடுபற்றி தேவையான விஷயங்களை அலசி ஆராய்ந்துவிட்டோம். இனி பாலிசி எடுக்க வேண்டியது ஒன்றுதான் பாக்கி. ஆனால், பாலிசி எடுக்க யோசிக்கும்பட்சத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது. கடந்த பல வருடங்களாக பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள்தான் மருத்துவக் காப்பீட்டை அளித்துவந்தன. இப்போது மருத்துவக் காப்பீடு மட்டுமே வழங்கும் பிரத்யேக மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் வந்துவிட்டன. இவை தவிர, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் மருத்துவக் காப்பீடு சேவையை அளித்துவருகின்றன. இவற்றில் எதைத் தேர்வு செய்வது?
மருத்துவக் காப்பீடு மட்டுமே கொடுக்கும் நிறுவனங்களில் மருத்துவக் காப்பீட்டை எடுக்கலாம், பிரச்னை இல்லை. அதைப் பற்றி விவாதிக்கவே தேவை இல்லை.
இது தவிர, பொதுக் காப்பீட்டு நிறுவனம் வழங்கும் பாலிசியை எடுப்பதா அல்லது ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வழங்கும் பாலிசியை எடுப்பதா? எது பெஸ்ட் என்று பார்ப்பதற்கு முன்பு இரண்டிலும் இருக்கும் சில சாதக பாதகங்களைப் பார்க்கலாமா...
ஆயுள் காப்பீடு
ஒவ்வோர் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் ஒவ்வொருவிதமாக பாலிசிகளை வழங்குகின்றன. சில நிறுவனங்கள் யூலிப் பாலிசியுடன் (முதலீட்டு திட்டம்) சேர்ந்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகின்றன. முதலீட்டுத் திட்டம் என்பதால், முதிர்வுத் தொகை கிடைக்கும். இது தவிர, 'கிரிட்டிக்கல் இல்னெஸ்’ எனப்படும் முக்கியமான நோய்களுக்கு மட்டுமே க்ளைம் கிடைக்கும் பாலிசிகளையும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. அதுவும் எந்தெந்த நோய்களுக்கு க்ளைம் உண்டு என்ற பட்டியல் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் வேறுபடும். டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட சில நோய்களுக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் க்ளைம் பெற முடியாது. மேலும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் இருக்கும் இந்த பாலிசியை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாற்ற முடியாது. இதில் ஒரு நன்மையும் இருக்கிறது. நீங்கள் எவ்வளவு தொகைக்குப் பாலிசி எடுத்திருந்தாலும் நோய் இருப்பது உண்மையானால், நீங்கள் பாலிசி எடுத்த தொகை அப்படியே முழுமையாக உங்களுக்குக் கிடைத்துவிடும். ஆனால், அந்த பாலிசியை அதன் பிறகு பயன்படுத்த முடியாது. அதாவது ரூ. 1 லட்சம் பாலிசி எடுத்திருந்து, 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகி இருந்தாலும், முழுத் தொகையான ரூ. 1 லட்சத்தையும் கொடுத்துவிடுவார்கள்.
பொதுக் காப்பீடு
பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் மருத்துவக் காப்பீட்டில், ஏற்கெனவே இருக்கும் நோய்கள், குறிப்பிட்ட சில நோய்கள் தவிர அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். நாம் பாலிசி எடுத்துள்ள நிறுவனத்தின் சேவை நமக்குப் பிடிக்கவில்லை என்றால், வேறு ஒரு நிறுவனத்துக்கு மாறிவிடலாம். பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பாலிசியில் செலவு செய்த தொகைக்கு மட்டுமே க்ளைம் கிடைக்கும். நாம் செலவு செய்த தொகைக்கு மட்டுமே க்ளைம் வாங்குவதால், அந்த பாலிசியானது தொடர்ந்து இருக்கும். ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் வசூலிக்கப்படும் ப்ரீமியத்தைவிட பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் ப்ரீமியம் கொஞ்சம் குறைவு.
என்ன செய்யலாம்?
பொதுக் காப்பீடு - ஆயுள் காப்பீடு இரண்டு நிறுவனங்களுமே ப்ரீமியத்துக்கான வரிவிலக்கு, ஃப்ளோட்டர் பாலிசி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் வழங்குகின்றன. இருந்தாலும் மருத்துவக் காப்பீடு மட்டும் வழங்கும் நிறுவனம் அல்லது பொதுக் காப்பீடு வழங்கும் நிறுவனங்களில் ஹெல்த் பாலிசி எடுப்பதே நல்லது.
பொதுவாக ஹெல்த் பாலிசி எடுப்பதன் நோக்கமே அனைத்து வகையான நோய்களில் இருந்தும் நம்மைத் தற்காத்துக்கொள்ளத்தான். ஆனால், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் கொடுக்கப்படும் பாலிசிகளில் அந்த நோக்கமே நிறைவேறாதபோது, அங்கு பாலிசி எடுப்பதுபற்றி யோசிக்க வேண்டும். பொதுக் காப்பீட்டு நிறுவன பாலிசியில், நாம் ஏற்கெனவே அனுபவித்துவந்த சலுகைகளைக் குறைத்துக்கொள்ளாமல் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாற முடியும்.
அதனால், முதல்முதலாக பாலிசி எடுப்பவர்கள் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை நாடுவது சிறந்தது. இந்த கவரேஜ் போதாது என்றால் மட்டுமே, கிரிடிகல் இல்னெஸ் பாலிசி போன்று ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பாலிசியை எடுக்கலாம். அதுகூட இப்போது தேவை இல்லை. பொதுக் காப்பீட்டு நிறுவனங்களே டாப்-அப் பாலிசியையும் வழங்குகிறார்கள்.
உங்களுக்கு எது முதலில் தேவை என்பதை நீங்களே முடிவெடுங்கள்!
காப்பீடு ஒரு முதலீடா?
'இந்த பாலிசியில் பணம் செலுத்தினால், எனக்கு என்ன திரும்ப கிடைக்கும்?’ என்ற எதிர்பார்ப்பு காப்பீடு விஷயத்தில் சரிப்பட்டு வராது. ஏனெனில், அசாதாரண சூழ்நிலைகளில் நமக்கு ஏற்படும் பண இழப்பைச் சரிகட்டுவதுதான் காப்பீட்டின் முக்கிய நோக்கம். 'நம் மறைவுக்குப் பிறகு நம் குடும்பத்துக்கு நிரந்தர வருமானம் கொடுக்க ஒரு டேர்ம் பாலிசி, உடல் நலக் குறைபாடுகளில் இருந்து குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்ற ஒரு மருத்துவக் காப்பீடு’ இவை இரண்டும்தான் முக்கியமே தவிர, முதலீட்டுக்கான ஒரு வாய்ப்பாக காப்பீட்டைப் பார்க்கத் தேவை இல்லை. முதலீட்டுக்கான வழிகள் ஆயிரம் இருக்கின்றன என்பதைத் தெளிவாக மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.
Post a Comment