கலப்பினப் பசுக்கள் கால்சியம் பற்றாக்குறை--விவசாயக்குறிப்புக்கள்
''என்னிடம் கலப்பினப் பசுக்கள் மூன்று உள்ளன. நன்றாக பால் கறக்கின்றன. ஆனால், கன்று ஈன்றவுடன், மாடு நடக்க முடியாமலும், எழ முடியாமலும் அ...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_03.html
''என்னிடம் கலப்பினப் பசுக்கள் மூன்று உள்ளன. நன்றாக பால் கறக்கின்றன. ஆனால், கன்று ஈன்றவுடன், மாடு நடக்க முடியாமலும், எழ முடியாமலும் அவதிப்படுகின்றன. கால்நடை மருத்துவரை அணுகினால் கால்சியம் பற்றாக்குறை என்று மருந்து கொடுக்கிறார். ஆனால், அது தற்காலிகமாகத்தான் பயனளிக்கிறது. இதைச் சரி செய்ய மூலிகை மருத்துவத்தில் வழி உண்டா?''
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, 'ஜெயம் பிராணிகள் அறக்கட்டளை' நிர்வாக அறங்காவலரும், பிராணிகள் நல கௌரவ அலுவலருமான கே.வி. கோவிந்தராஜ் பதில் சொல்கிறார்.
''கலப்பினக் கறவை மாடுகளில், மூன்றாவது முறை கன்று ஈன்றவுடன் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுவது வாடிக்கை. கால்சியம் பற்றாக்குறையை உடனடியாக போக்க, சுண்ணாம்பு நீர் கை கொடுக்கும். ஒரு கிலோ கல் சுண்ணாம்புத் தூளை மண்பானையில் கொட்டி, 10 லிட்டர் நீர் சேர்த்து ஊற வைத்து, மறுநாள் காலை தெளிந்த சுண்ணாம்பு நீரை மட்டும் சேகரிக்க வேண்டும். ஒரு மாட்டுக்கு அரை லிட்டர் என்ற அளவில் தினமும் கொடுத்து வந்தால், இருபது நாட்களில் கால்சியம் குறைபாடு நீங்கி விடும். தொடர்ந்து, தீவனத்துடன் ஒரு கைப்பிடி அகத்திக் கீரை கொடுத்து வந்தால், கால்சியம் பற்றாக்குறை ஏற்படாது. கூடவே, தினமும் 20 வெற்றிலை அல்லது ஒரு சோற்றுக் கற்றாழை மடல் போன்றவற்றையும் கொடுத்து வரலாம்.
வேம்பு, துளசி, மூங்கில் இலை, நொச்சி, ஆவாரை, சோற்றுக்கற்றாழை, அருகம்புல், கொய்யா, வெற்றிலை, முருங்கை... ஆகிய இலைகளில் தலா ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றோடு ஒரு கைப்பிடி வாழைப்பூவைச் சேர்த்து இடித்து தனியாக வைக்க வேண்டும். திப்பிலி, மிளகு, சுக்கு, வெந்தயம், கசகசா, ஓமம், பெருங்காயம், சீரகம், சதக்குப்பை, சித்தரத்தை, சோம்பு, வால்மிளகு, மல்லித் தூள் ஆகியவற்றில் தலா 10 கிராம்; காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றில் தலா 50 கிராம்; 100 கிராம் பனை வெல்லம், 250 கிராம் வெங்காயம், கால் மூடி தேங்காய், ஒரு துண்டு வசம்பு இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து இடித்து கொள்ளவேண்டும்.
பிறகு, ஏற்கெனவே இடித்து வைத்திருக்கும் இலைக் கலவை மற்றும் மூலிகைப் பொருட்கள் கலவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து, 50 கிராம் அளவு உருண்டைகளாகப் பிடித்து, மஞ்சள் தூளில் உருட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு, 'மசால் உருண்டை' என்று பெயர். இதை, கால்நடைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், கால்சியம் பற்றாக்குறை, சினை தங்காமை, குடற்புழு நீக்கம்... போன்ற பல நோய்கள் வராமல் தடுத்து விடலாம். தினமும் மாட்டுக்கு 2 உருண்டைகள், ஆட்டுக்கு 1 உருண்டை என்ற அளவில் குறிப்பிட்ட காலத்துக்குக் கொடுக்க வேண்டும். தயாரித்த மூன்று நாட்களுக்குள் இதைப் பயன்படுத்திவிட வேண்டும் என்பது கவனத்தில் இருக்கட்டும்.''
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, 'ஜெயம் பிராணிகள் அறக்கட்டளை' நிர்வாக அறங்காவலரும், பிராணிகள் நல கௌரவ அலுவலருமான கே.வி. கோவிந்தராஜ் பதில் சொல்கிறார்.
''கலப்பினக் கறவை மாடுகளில், மூன்றாவது முறை கன்று ஈன்றவுடன் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுவது வாடிக்கை. கால்சியம் பற்றாக்குறையை உடனடியாக போக்க, சுண்ணாம்பு நீர் கை கொடுக்கும். ஒரு கிலோ கல் சுண்ணாம்புத் தூளை மண்பானையில் கொட்டி, 10 லிட்டர் நீர் சேர்த்து ஊற வைத்து, மறுநாள் காலை தெளிந்த சுண்ணாம்பு நீரை மட்டும் சேகரிக்க வேண்டும். ஒரு மாட்டுக்கு அரை லிட்டர் என்ற அளவில் தினமும் கொடுத்து வந்தால், இருபது நாட்களில் கால்சியம் குறைபாடு நீங்கி விடும். தொடர்ந்து, தீவனத்துடன் ஒரு கைப்பிடி அகத்திக் கீரை கொடுத்து வந்தால், கால்சியம் பற்றாக்குறை ஏற்படாது. கூடவே, தினமும் 20 வெற்றிலை அல்லது ஒரு சோற்றுக் கற்றாழை மடல் போன்றவற்றையும் கொடுத்து வரலாம்.
வேம்பு, துளசி, மூங்கில் இலை, நொச்சி, ஆவாரை, சோற்றுக்கற்றாழை, அருகம்புல், கொய்யா, வெற்றிலை, முருங்கை... ஆகிய இலைகளில் தலா ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றோடு ஒரு கைப்பிடி வாழைப்பூவைச் சேர்த்து இடித்து தனியாக வைக்க வேண்டும். திப்பிலி, மிளகு, சுக்கு, வெந்தயம், கசகசா, ஓமம், பெருங்காயம், சீரகம், சதக்குப்பை, சித்தரத்தை, சோம்பு, வால்மிளகு, மல்லித் தூள் ஆகியவற்றில் தலா 10 கிராம்; காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றில் தலா 50 கிராம்; 100 கிராம் பனை வெல்லம், 250 கிராம் வெங்காயம், கால் மூடி தேங்காய், ஒரு துண்டு வசம்பு இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து இடித்து கொள்ளவேண்டும்.
பிறகு, ஏற்கெனவே இடித்து வைத்திருக்கும் இலைக் கலவை மற்றும் மூலிகைப் பொருட்கள் கலவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து, 50 கிராம் அளவு உருண்டைகளாகப் பிடித்து, மஞ்சள் தூளில் உருட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு, 'மசால் உருண்டை' என்று பெயர். இதை, கால்நடைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், கால்சியம் பற்றாக்குறை, சினை தங்காமை, குடற்புழு நீக்கம்... போன்ற பல நோய்கள் வராமல் தடுத்து விடலாம். தினமும் மாட்டுக்கு 2 உருண்டைகள், ஆட்டுக்கு 1 உருண்டை என்ற அளவில் குறிப்பிட்ட காலத்துக்குக் கொடுக்க வேண்டும். தயாரித்த மூன்று நாட்களுக்குள் இதைப் பயன்படுத்திவிட வேண்டும் என்பது கவனத்தில் இருக்கட்டும்.''
Post a Comment