அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-3
பெர்முடா முக்கோணம் ( Bermuda Triangle ) தன் எல்லைக்குள் புகும் கப்பல்களையும், விமானங்களையும், மனிதர்களையும் கபளீகரம் செய்யும் மாரணக்குழி பெ...
https://pettagum.blogspot.com/2012/04/3.html
பெர்முடா முக்கோணம் ( Bermuda Triangle )
தன் எல்லைக்குள் புகும் கப்பல்களையும், விமானங்களையும், மனிதர்களையும் கபளீகரம் செய்யும் மாரணக்குழி பெர்முடா முக்கோணம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அட்லாண்டிக் மகா சமுத்திரத்தின் மெற்கு பகுதியில், புளோரிடா, பெர்முடா, ப்யூட்ரோ ரிக்கோ மாநிலங்களுக்கு இடையே அமைந்திருக்கும் பகுதி தான் பெர்முடா முக்கோணம். இயற்கையாகவே உருவாகியிருக்கும் இந்த மரணக்குழி, இதுவரை நூற்றுக்கணக்கான கப்பல், விமானங்களையும், ஆயிரக்கணக்கான மனிதர்களையும் விழுங்கி ஏப்பம் விட்டுள்ளது. இன்னும் இதன் பசி அடங்கவில்லை.
இந்தப் பகுதியை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் மீன்கள் வசிக்க பயந்து, தூரவே விலகிவாழ்ந்து வருகின்றன.
இந்த மரணக்குழியின் பரப்பளவு, ஆழம் எவ்வளவு? அப்பகுதியின் தன்மை என்ன? மூழ்கிய கப்பல், விமானங்கள் என்ன ஆயின? அவற்றின் சிறு பகுதிகளோ மனிதர்களின் ஒரு துண்டு எலும்போ கூட கிடைக்காததின் மர்மம் என்ன? -இது போன்ற பல கேள்விகள் விஞ்ஞானிகளை விழிக்க வைத்துக் கொண்டுள்ளன. இதுவரை சின்ன ஆதாரம் கூட கிடைக்கவில்லை.
பூமியின் புவியீர்ப்பு தன்மை இந்த பகுதியில் அளவுக் கதிகமாக இருக்கிறது என்கின்றனர் ஒரு பிரிவினர். மற்றொரு பிரிவினரோ, பல நூற்றண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் இருந்த தீவுப்பகுதி ஒன்று மூழ்கி இருக்க வேண்டும். அளவுக்கதிகமாக நீர் சுழற்சியின் காரணமாக இப்படி எல்லாம் நடைபெறுகிறது என்கின்றனர்.
மூன்றாவது அணியினரோ, மனிதனை விட அறிவிலும், தொழில்நுட்பத்திலும் மேலோங்கி இருக்கும் வேற்று கிரகத்து மனிதர்களின் ஆராய்ச்சி பகுதியாக அது இருக்கக் கூடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பெர்முடா முக்கோணம் பற்றி 1964ல் தான் வெளி உலகுக்கு தெரிய வந்தது. வின்சன்ட் எச். காட்டிஸ் என்ற எழுத்தாளர், தான் எழுதிய கட்டுரை ஒன்றில் மேலோட்டமாக இதைப்பற்றி கூறியிருந்தார். அவரை தொடர்ந்து, இவான் டி சாண்டர்சன் என்பவர், மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடங்கிய கட்டுரை ஒன்றை எழுதினார்.
அதன்பின், பெர்முடா முக்கோணம் பற்றி அறிய நிறைய பேர் கிளம்பினர். 'என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா' பெர்முடா முக்கோணம் பற்றி பல பக்கங்களுக்கு தகவல்களை சேகரித்து வெளியிட்டது.
பெர்முடா முக்கோணம் பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டன. ஆனால், எந்தவொரு எழுத்தாளரும் பெர்முடா முக்கோணத்தின் ரகசியத்தை எழுதவே இல்லை.
இந்த நேரத்தில் தான் அதாவது, 1974ல் லாரன்ஸ் டி குஷே என்பவர் 'பெர்முடா முக்கோண ரகசியம் அம்பலம்' என்று ஒரு புத்தகம் வெளியிட்டார்.
அதில், அதிகமான நீர்சுழற்சியின் காரணமாகவே கப்பல்கள் மூழ்குகின்றன என்றும், அந்த சுழற்சியாய் ஏற்படும் மின்காந்த அலையால், உலோகத்தால் செய்யப்பட்ட விமானங்கள் ஈர்க்கப்பட்டு மூழ்குகின்றன என்று பல ஆதாரங்களுடன் கூறியிருந்தார். இது ஒருவிதத்தில் சரியாக இருந்தாலும், பல கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் மேலும் சர்ச்சையை தான் கிளப்பின.
அமெரிக்க - ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டாக இதைப் பற்றி ஆராய, நவீன கருவிகளுடன் சென்றனர். இந்த ஆரய்ச்சி குழுவில் இருந்த 16 பேர் ஏதோ ஒரு விசையால் செலுத்தப்பட்டவர்கள் போல் திடீரென்று மூழ்கி போயினர். எப்படி மூழ்கினர் என்று மற்றவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
உண்மை சில நேரங்களில் கற்பனையை விட அதிசயமாக இருக்கும் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் இருக்க முடியும்.
விரைவில் விடை கிடைக்குமா பார்க்கலாம்.
தன் எல்லைக்குள் புகும் கப்பல்களையும், விமானங்களையும், மனிதர்களையும் கபளீகரம் செய்யும் மாரணக்குழி பெர்முடா முக்கோணம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அட்லாண்டிக் மகா சமுத்திரத்தின் மெற்கு பகுதியில், புளோரிடா, பெர்முடா, ப்யூட்ரோ ரிக்கோ மாநிலங்களுக்கு இடையே அமைந்திருக்கும் பகுதி தான் பெர்முடா முக்கோணம். இயற்கையாகவே உருவாகியிருக்கும் இந்த மரணக்குழி, இதுவரை நூற்றுக்கணக்கான கப்பல், விமானங்களையும், ஆயிரக்கணக்கான மனிதர்களையும் விழுங்கி ஏப்பம் விட்டுள்ளது. இன்னும் இதன் பசி அடங்கவில்லை.
இந்தப் பகுதியை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் மீன்கள் வசிக்க பயந்து, தூரவே விலகிவாழ்ந்து வருகின்றன.
இந்த மரணக்குழியின் பரப்பளவு, ஆழம் எவ்வளவு? அப்பகுதியின் தன்மை என்ன? மூழ்கிய கப்பல், விமானங்கள் என்ன ஆயின? அவற்றின் சிறு பகுதிகளோ மனிதர்களின் ஒரு துண்டு எலும்போ கூட கிடைக்காததின் மர்மம் என்ன? -இது போன்ற பல கேள்விகள் விஞ்ஞானிகளை விழிக்க வைத்துக் கொண்டுள்ளன. இதுவரை சின்ன ஆதாரம் கூட கிடைக்கவில்லை.
பூமியின் புவியீர்ப்பு தன்மை இந்த பகுதியில் அளவுக் கதிகமாக இருக்கிறது என்கின்றனர் ஒரு பிரிவினர். மற்றொரு பிரிவினரோ, பல நூற்றண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் இருந்த தீவுப்பகுதி ஒன்று மூழ்கி இருக்க வேண்டும். அளவுக்கதிகமாக நீர் சுழற்சியின் காரணமாக இப்படி எல்லாம் நடைபெறுகிறது என்கின்றனர்.
மூன்றாவது அணியினரோ, மனிதனை விட அறிவிலும், தொழில்நுட்பத்திலும் மேலோங்கி இருக்கும் வேற்று கிரகத்து மனிதர்களின் ஆராய்ச்சி பகுதியாக அது இருக்கக் கூடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பெர்முடா முக்கோணம் பற்றி 1964ல் தான் வெளி உலகுக்கு தெரிய வந்தது. வின்சன்ட் எச். காட்டிஸ் என்ற எழுத்தாளர், தான் எழுதிய கட்டுரை ஒன்றில் மேலோட்டமாக இதைப்பற்றி கூறியிருந்தார். அவரை தொடர்ந்து, இவான் டி சாண்டர்சன் என்பவர், மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடங்கிய கட்டுரை ஒன்றை எழுதினார்.
அதன்பின், பெர்முடா முக்கோணம் பற்றி அறிய நிறைய பேர் கிளம்பினர். 'என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா' பெர்முடா முக்கோணம் பற்றி பல பக்கங்களுக்கு தகவல்களை சேகரித்து வெளியிட்டது.
பெர்முடா முக்கோணம் பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டன. ஆனால், எந்தவொரு எழுத்தாளரும் பெர்முடா முக்கோணத்தின் ரகசியத்தை எழுதவே இல்லை.
இந்த நேரத்தில் தான் அதாவது, 1974ல் லாரன்ஸ் டி குஷே என்பவர் 'பெர்முடா முக்கோண ரகசியம் அம்பலம்' என்று ஒரு புத்தகம் வெளியிட்டார்.
அதில், அதிகமான நீர்சுழற்சியின் காரணமாகவே கப்பல்கள் மூழ்குகின்றன என்றும், அந்த சுழற்சியாய் ஏற்படும் மின்காந்த அலையால், உலோகத்தால் செய்யப்பட்ட விமானங்கள் ஈர்க்கப்பட்டு மூழ்குகின்றன என்று பல ஆதாரங்களுடன் கூறியிருந்தார். இது ஒருவிதத்தில் சரியாக இருந்தாலும், பல கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் மேலும் சர்ச்சையை தான் கிளப்பின.
அமெரிக்க - ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டாக இதைப் பற்றி ஆராய, நவீன கருவிகளுடன் சென்றனர். இந்த ஆரய்ச்சி குழுவில் இருந்த 16 பேர் ஏதோ ஒரு விசையால் செலுத்தப்பட்டவர்கள் போல் திடீரென்று மூழ்கி போயினர். எப்படி மூழ்கினர் என்று மற்றவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
உண்மை சில நேரங்களில் கற்பனையை விட அதிசயமாக இருக்கும் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் இருக்க முடியும்.
விரைவில் விடை கிடைக்குமா பார்க்கலாம்.
1 comment
பெர்முடா முக்கோணம்ப்ளோரிடா, போர்டேரிகோபெர்முடா முக்கோணம் வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் உள்ளது இது பெர்முடா, ப்ளோரிடா, போர்டேரிகோ பகுதிகளுக்கு இடைப்பட்ட ஒரு முக்கோண வடிவ கடல் பகுதியாகும்
Post a Comment