பனீர் சமையல் – 1 ---சமையல் குறிப்புகள்,
பனீர் சமையல் – 1 பனீர் பொரியல் தேவை பனீர் - 1 கப் பச்சை பட்டாணி - 1 கப் வெங்காயம் - 1 பச்சை மி...
https://pettagum.blogspot.com/2012/04/1_16.html
பனீர் சமையல் – 1
பனீர் பொரியல்
தேவை
பனீர் - 1 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். பட்டாணியை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். பனீரை நன்கு தூளாக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியவுடன் பனீரைப் போட்டு உப்பு போட்டு நன்கு கிளறவும். கடைசியாக பட்டாணியை போட்டு நன்கு கிளறி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பனீர் 65
தேவை
பனீர் - 200 கிராம்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் வெந்நீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து அதில் பனீரைப் போட்டு பிசறி அரைமணி நேரம் ஊற விடவும். பின்னர் எண்ணெயில் பொரித்தெடுத்து தக்காளி சாஸ§டன் பரிமாறவும்.
பனீர் கபாப்
தேவை
பனீர் - 1 கப்
வாழைக்காய் - 2
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
பச்சை மிளகாய் - 4
கிராம்புப் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகு பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி - 1/4 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
வாழைக்காயை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேக வைத்த வாழைக்காய், பனீர், பொட்டுக்கடலை மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, உப்பு, கரம் மசாலாப் பொடி, மிளகு பொடி, கிராம்புப் பொடி சேர்த்துப் பிசைந்து நீள உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் எண்ணெய்யை ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கி மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். சூடாக சாஸ§டன் பரிமாறவும்.
பனீர் ஃபிங்கர்ஸ்
தேவை
பனீர் - 300 கிராம்
எலுமிச்சம் ஜுஸ் - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மேல் மாவிற்கு
கடலை மாவு - 1 கப்
கார்ன் ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
சமையல் சோடா - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/4 கப்
கறுப்பு உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
சாட் மசாலா - 2 டீஸ்பூன் (தூவ)
செய்முறை
பனீரை நீளத் துண்டுகளாக அதாவது 6 – 2 அளவு நறுக்கி உப்பு, எலுமிச்சம் ஜுஸ், மிளகாய் பொடி சேர்த்து பிசறி வைக்கவும். கடலை மாவு, உப்பு, கார்ன் ஃப்ளார், சமையல் சோடா, கறுப்பு உப்பு, ஓமம், மிளகாய் விழுது, பூண்டு விழுது, கரம் மசாலா, கொத்தமல்லி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி ஊற வைத்து வைத்துள்ள பனீரை கடலை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். சாஸ§டன் பரிமாறவும்.
பனீர் கோப்தா மோர்க்குழம்பு
தேவை
கோப்தாவிற்கு
பனீர் தூள் - 1 கப்
கடலை மாவு - 1/4 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
ஓமம் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி, புதினா - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மோர்க்குழம்பிற்கு
தயிர் - 500 மி.லி.
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 2 சிட்டிகை
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
பூண்டு பல் - 2
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
(பச்சை மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.)
செய்முறை
தயிரை நன்கு கடைந்து அதனுடன் கடலை மாவு, பெருங்காயம், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். இதனை அடுப்பில் வைத்து கொதித்ததும் அடுப்பைக் குறைக்கவும். பனீர், கடலை மாவு, ஓமம், சமையல் சோடா, உப்பு, கரம் மசாலா, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி கொத்தமல்லி, புதினா எல்லாவற்றையும் ஒனறாகச் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் மோர்க்குழம்பில் போட்டு வேக விடவும். முதல் 5 நிமிடம் அடுப்பைக் கூட்டியும் பின்னர் அடுப்பைக் குறைத்து 15 நிமிடம் வேக விடவும். குழம்பு திக்காக இருந்தால் 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும். ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, சீரகம் போட்டு வெடித்ததும், வெந்தயம் போட்டு பின் பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி இறக்கவும். இது சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
பனீர் பொரியல்
தேவை
பனீர் - 1 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். பட்டாணியை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். பனீரை நன்கு தூளாக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியவுடன் பனீரைப் போட்டு உப்பு போட்டு நன்கு கிளறவும். கடைசியாக பட்டாணியை போட்டு நன்கு கிளறி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பனீர் 65
தேவை
பனீர் - 200 கிராம்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் வெந்நீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து அதில் பனீரைப் போட்டு பிசறி அரைமணி நேரம் ஊற விடவும். பின்னர் எண்ணெயில் பொரித்தெடுத்து தக்காளி சாஸ§டன் பரிமாறவும்.
பனீர் கபாப்
தேவை
பனீர் - 1 கப்
வாழைக்காய் - 2
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
பச்சை மிளகாய் - 4
கிராம்புப் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகு பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி - 1/4 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
வாழைக்காயை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேக வைத்த வாழைக்காய், பனீர், பொட்டுக்கடலை மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, உப்பு, கரம் மசாலாப் பொடி, மிளகு பொடி, கிராம்புப் பொடி சேர்த்துப் பிசைந்து நீள உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் எண்ணெய்யை ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கி மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். சூடாக சாஸ§டன் பரிமாறவும்.
பனீர் ஃபிங்கர்ஸ்
தேவை
பனீர் - 300 கிராம்
எலுமிச்சம் ஜுஸ் - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மேல் மாவிற்கு
கடலை மாவு - 1 கப்
கார்ன் ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
சமையல் சோடா - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/4 கப்
கறுப்பு உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
சாட் மசாலா - 2 டீஸ்பூன் (தூவ)
செய்முறை
பனீரை நீளத் துண்டுகளாக அதாவது 6 – 2 அளவு நறுக்கி உப்பு, எலுமிச்சம் ஜுஸ், மிளகாய் பொடி சேர்த்து பிசறி வைக்கவும். கடலை மாவு, உப்பு, கார்ன் ஃப்ளார், சமையல் சோடா, கறுப்பு உப்பு, ஓமம், மிளகாய் விழுது, பூண்டு விழுது, கரம் மசாலா, கொத்தமல்லி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி ஊற வைத்து வைத்துள்ள பனீரை கடலை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். சாஸ§டன் பரிமாறவும்.
பனீர் கோப்தா மோர்க்குழம்பு
தேவை
கோப்தாவிற்கு
பனீர் தூள் - 1 கப்
கடலை மாவு - 1/4 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
ஓமம் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி, புதினா - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மோர்க்குழம்பிற்கு
தயிர் - 500 மி.லி.
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 2 சிட்டிகை
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
பூண்டு பல் - 2
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
(பச்சை மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.)
செய்முறை
தயிரை நன்கு கடைந்து அதனுடன் கடலை மாவு, பெருங்காயம், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். இதனை அடுப்பில் வைத்து கொதித்ததும் அடுப்பைக் குறைக்கவும். பனீர், கடலை மாவு, ஓமம், சமையல் சோடா, உப்பு, கரம் மசாலா, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி கொத்தமல்லி, புதினா எல்லாவற்றையும் ஒனறாகச் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் மோர்க்குழம்பில் போட்டு வேக விடவும். முதல் 5 நிமிடம் அடுப்பைக் கூட்டியும் பின்னர் அடுப்பைக் குறைத்து 15 நிமிடம் வேக விடவும். குழம்பு திக்காக இருந்தால் 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும். ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, சீரகம் போட்டு வெடித்ததும், வெந்தயம் போட்டு பின் பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி இறக்கவும். இது சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Post a Comment