அவல் புட்டு---சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் அவல் – 1/2 கப் வெல்லம் – 1/2 கப் தேங்காய்த் துருவல் – 1/2 கப் மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி முந்திரிப் பருப்பு – 4, 5...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_8494.html
தேவையான பொருட்கள்
அவல் – 1/2 கப்
வெல்லம் – 1/2 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு – 4, 5
ஏலக்காய்ப் பொடி – 1/4 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய்யைச் சூடாக்கி, அவலை நன்கு சிவக்க வறுத்து ரவை போல் பொடித்துக் கொள்ளவும்.
சிறிதளவு தண்ணீரில் உப்பும், மஞ்சள் பொடியும் சேர்த்து இளஞ்சூடாக்கிக் கொள்ளவும். அதை அவல் பொடியுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிசிறிக் கொள்ளவும். கொஞ்சம் மாவை கையிலெடுத்துப் பிடித்தால் கொழுக்கட்டை போல் இறுகி நிற்கவும் லேசாகத் தட்டினால் உதிரவும் வேண்டும். இந்தப் பக்குவம் வரும் வரையில் தண்ணீரைச் சேர்க்கவும்.
அடி கனமான ஒரு வாணலியில் ஐம்பது மி.லி தண்ணீரைச் சூடாக்கி அதில் வெல்லத்தைப் போட்டு நன்கு கரைய விடவும். கரைந்ததும் வடிகட்டிப் பாகு காய்ச்சவும். பாகில் ஒரு துளியெடுத்து பாத்திரத்திலிருக்கும் தண்ணீரில் இட்டால் உடனே கெட்டியான உருண்டையாக வேண்டும். இதுவே சரியான பக்குவம். இந்தப் பக்குவம் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
இந்த சர்க்கரைப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக அவல் மாவில் ஊற்றி மிருதுவாகப் பிசிறவும். அழுத்தமாகப் பிசையக் கூடாது.
நெய்யைச் சூடாக்கி, அதில் முந்திரிப் பருப்பு, தேங்காய்த் துருவல் போன்றவற்றை சிவக்க வறுக்கவும். இதையும் ஏலக்காய்ப் பொடியையும், மாவில் கொட்டிக் கிளறவும்.
தயாரான புட்டை சிறிது ஆற விட்டுப் பரிமாறவும்.
அவல் – 1/2 கப்
வெல்லம் – 1/2 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு – 4, 5
ஏலக்காய்ப் பொடி – 1/4 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய்யைச் சூடாக்கி, அவலை நன்கு சிவக்க வறுத்து ரவை போல் பொடித்துக் கொள்ளவும்.
சிறிதளவு தண்ணீரில் உப்பும், மஞ்சள் பொடியும் சேர்த்து இளஞ்சூடாக்கிக் கொள்ளவும். அதை அவல் பொடியுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிசிறிக் கொள்ளவும். கொஞ்சம் மாவை கையிலெடுத்துப் பிடித்தால் கொழுக்கட்டை போல் இறுகி நிற்கவும் லேசாகத் தட்டினால் உதிரவும் வேண்டும். இந்தப் பக்குவம் வரும் வரையில் தண்ணீரைச் சேர்க்கவும்.
அடி கனமான ஒரு வாணலியில் ஐம்பது மி.லி தண்ணீரைச் சூடாக்கி அதில் வெல்லத்தைப் போட்டு நன்கு கரைய விடவும். கரைந்ததும் வடிகட்டிப் பாகு காய்ச்சவும். பாகில் ஒரு துளியெடுத்து பாத்திரத்திலிருக்கும் தண்ணீரில் இட்டால் உடனே கெட்டியான உருண்டையாக வேண்டும். இதுவே சரியான பக்குவம். இந்தப் பக்குவம் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
இந்த சர்க்கரைப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக அவல் மாவில் ஊற்றி மிருதுவாகப் பிசிறவும். அழுத்தமாகப் பிசையக் கூடாது.
நெய்யைச் சூடாக்கி, அதில் முந்திரிப் பருப்பு, தேங்காய்த் துருவல் போன்றவற்றை சிவக்க வறுக்கவும். இதையும் ஏலக்காய்ப் பொடியையும், மாவில் கொட்டிக் கிளறவும்.
தயாரான புட்டை சிறிது ஆற விட்டுப் பரிமாறவும்.
Post a Comment