எது சாப்பிட்டாலும் சரியா ஜீரணம் ஆக மாட்டேங்குது..---பாட்டி வைத்தியம்
பனிக்காலம் முடிந்து இளவேணிற் காலத்தின் மெல்லிய வெயில் பரவத் தொடங்கியிருந்தது. அறுவடை முடிந்தும் முடியாமலும் இருந்ததால் பாட்டியின் வீடெங்க...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_6826.html
பனிக்காலம் முடிந்து இளவேணிற் காலத்தின் மெல்லிய வெயில் பரவத் தொடங்கியிருந்தது.
அறுவடை முடிந்தும் முடியாமலும் இருந்ததால் பாட்டியின் வீடெங்கும் நெல்மணிகள் இரைந்துக் கிடந்தன.
மீதமுள்ள அறுவடை வேலைகளைக் கவனிப்பதில் பாட்டி மும்முரமாக இருந்தாள்.
அறுவடைக் காலம் என்பது பாட்டி வீட்டைப் பொருத்தவரை ஒரு திருமண விழாவைப் போல சமையல்... சாப்பாடு என களை கட்டும். ஏறத்தாழ இரண்டு மாதங்கள் வயலில் வேலை செய்யும் அனைவருக்கும் வீட்டில்தான் சாப்பாடு.
இப்படி அறுவடை பரபரப்பில் மூழ்கிப்போயிருந்த பாட்டியை பார்க்க வந்திருந்தாள் மீனாட்சி. கூடவே, மீனாட்சியம்மாள் தனது பேத்தியையும் அழைத்து வந்திருந்தாள்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தித்ததால் மீனாட்சியை சற்று வழக்கத்திற்கு மீறிய உற்சாகத்துடனேயே பாட்டி வரவேற்றாள். கூட வந்திருந்த பேத்தியையும் பாட்டி நலம் விசாரித்தாள்..
அப்போது, பேத்தியின் உடல்நிலை குறித்து பேசவே தான் வந்திருப்பதாக மீனாட்சி கூறினாள்.
இப்பத்தான் வயசுப் புள்ளைகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக்கிட்டுதான இருக்கு.
என்னன்னு சொல்லு.. நம்ம பேத்திக்கு பாக்காம வேற யாருக்கு பாக்கப்போறேன்.. என்று மீனாட்சியம்மாளிடம் கரிசனத்துடன் கேட்டாள் பாட்டி.
அதுவந்து பாட்டியம்மா.. இவ சாப்பிட்ட உடனேயே வாந்தி எடுக்குற மாதிரி இருக்குங்குறா.. அடிக்கடி மலம் வெளியாகுதுங்குறா.. இதனால கல்யாணம் மாதிரியான விசேஷங்களுக்கு வெளிய போக முடியல.. மொத்தத்துல அவளுக்கு எது சாப்பிட்டாலும் சரியா ஜீரணம் ஆக மாட்டேங்குது.. இதுக்கு என்ன செய்யலாம் பாட்டி..
இந்தக் காலத்து பொண்ணுக ரொம்ப பேரு காலை சாப்பாட்ட அலட்சியப்படுத்திடுறாங்க..
இரவு சாப்பிட்ட பிறகு 10 மணி நேரம் இடைவெளிக்குப் பிறகு காலை பலகாரம் சாப்பிடவேண்டிய நேரம். இந்த காலை சாப்பாடு 10 மணிநேர இடைவெளியால் காலியா இருக்கும் குடலை நிரப்பக்கூடியது.. இத அலட்சியப்படுத்தினா பகல் உணவு சாப்புடுற வரைக்கும் வயிறு காலியாவே இருக்கும்.
இதனால குடல் முழுக்க வாய்வு வியாபித்து தேவையில்லாத சங்கடங்கள ஏற்படுத்தும். பெரும்பாலான பெண்களுக்கு வயிறு சீர்கெட்டுப் போறது இப்பிடித்தான். மூன்று வேளையும் முக்கியமாக சாப்பிட வேண்டியது காலை நேரம்தான். இனிமேலாவது காலை உணவ அலட்சியப்படுத்தாம சாப்பிடப்பாரு.
அதோட,
சுக்கு
மிளகு
திப்பிலி இம் -மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து பொடித்து காலை வேளையில் தேன் கலந்து சாப்பாட்டுக்கு முன்னால் சாப்பிடு ,
அதுபோல, நாட்டு மருந்துக்கடையில கிடைக்கிற அஸ்ட சூரணத்த வாங்கி வெந்நீர்ல கலந்து சாப்பாட்டுக்குப் பிறகு சாப்பிடு.. இல்லாட்டி,
சீரகம் 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
நல்லமிளகு 5
இவைகள இடிச்சி பொடியாக்கி வெந்நீர்ல கலந்து குடி.. இதுல ஏதாவது ஒரு மருந்த தொடந்து சாப்பிடு.. சீக்கிரம் குணமாயிடும். ஆனா, காலை உணவ ஒழங்கா சாப்பிடாம, வெறும் மருந்த மட்டும் சாப்பிட்டா இது குணமாகாது.. அதையும் புரிஞ்சிக்க..என்றாள் பாட்டி..
பாட்டியின் அறிவுரைகளை கவனத்தில் கொள்ளுமாறு தன் பார்வையாலேயே பேத்திக்குஅறிவுறுத்திய மீனாட்சி, அவளை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள்.
அறுவடை முடிந்தும் முடியாமலும் இருந்ததால் பாட்டியின் வீடெங்கும் நெல்மணிகள் இரைந்துக் கிடந்தன.
மீதமுள்ள அறுவடை வேலைகளைக் கவனிப்பதில் பாட்டி மும்முரமாக இருந்தாள்.
அறுவடைக் காலம் என்பது பாட்டி வீட்டைப் பொருத்தவரை ஒரு திருமண விழாவைப் போல சமையல்... சாப்பாடு என களை கட்டும். ஏறத்தாழ இரண்டு மாதங்கள் வயலில் வேலை செய்யும் அனைவருக்கும் வீட்டில்தான் சாப்பாடு.
இப்படி அறுவடை பரபரப்பில் மூழ்கிப்போயிருந்த பாட்டியை பார்க்க வந்திருந்தாள் மீனாட்சி. கூடவே, மீனாட்சியம்மாள் தனது பேத்தியையும் அழைத்து வந்திருந்தாள்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தித்ததால் மீனாட்சியை சற்று வழக்கத்திற்கு மீறிய உற்சாகத்துடனேயே பாட்டி வரவேற்றாள். கூட வந்திருந்த பேத்தியையும் பாட்டி நலம் விசாரித்தாள்..
அப்போது, பேத்தியின் உடல்நிலை குறித்து பேசவே தான் வந்திருப்பதாக மீனாட்சி கூறினாள்.
இப்பத்தான் வயசுப் புள்ளைகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக்கிட்டுதான இருக்கு.
என்னன்னு சொல்லு.. நம்ம பேத்திக்கு பாக்காம வேற யாருக்கு பாக்கப்போறேன்.. என்று மீனாட்சியம்மாளிடம் கரிசனத்துடன் கேட்டாள் பாட்டி.
அதுவந்து பாட்டியம்மா.. இவ சாப்பிட்ட உடனேயே வாந்தி எடுக்குற மாதிரி இருக்குங்குறா.. அடிக்கடி மலம் வெளியாகுதுங்குறா.. இதனால கல்யாணம் மாதிரியான விசேஷங்களுக்கு வெளிய போக முடியல.. மொத்தத்துல அவளுக்கு எது சாப்பிட்டாலும் சரியா ஜீரணம் ஆக மாட்டேங்குது.. இதுக்கு என்ன செய்யலாம் பாட்டி..
இந்தக் காலத்து பொண்ணுக ரொம்ப பேரு காலை சாப்பாட்ட அலட்சியப்படுத்திடுறாங்க..
இரவு சாப்பிட்ட பிறகு 10 மணி நேரம் இடைவெளிக்குப் பிறகு காலை பலகாரம் சாப்பிடவேண்டிய நேரம். இந்த காலை சாப்பாடு 10 மணிநேர இடைவெளியால் காலியா இருக்கும் குடலை நிரப்பக்கூடியது.. இத அலட்சியப்படுத்தினா பகல் உணவு சாப்புடுற வரைக்கும் வயிறு காலியாவே இருக்கும்.
இதனால குடல் முழுக்க வாய்வு வியாபித்து தேவையில்லாத சங்கடங்கள ஏற்படுத்தும். பெரும்பாலான பெண்களுக்கு வயிறு சீர்கெட்டுப் போறது இப்பிடித்தான். மூன்று வேளையும் முக்கியமாக சாப்பிட வேண்டியது காலை நேரம்தான். இனிமேலாவது காலை உணவ அலட்சியப்படுத்தாம சாப்பிடப்பாரு.
அதோட,
சுக்கு
மிளகு
திப்பிலி இம் -மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து பொடித்து காலை வேளையில் தேன் கலந்து சாப்பாட்டுக்கு முன்னால் சாப்பிடு ,
அதுபோல, நாட்டு மருந்துக்கடையில கிடைக்கிற அஸ்ட சூரணத்த வாங்கி வெந்நீர்ல கலந்து சாப்பாட்டுக்குப் பிறகு சாப்பிடு.. இல்லாட்டி,
சீரகம் 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
நல்லமிளகு 5
இவைகள இடிச்சி பொடியாக்கி வெந்நீர்ல கலந்து குடி.. இதுல ஏதாவது ஒரு மருந்த தொடந்து சாப்பிடு.. சீக்கிரம் குணமாயிடும். ஆனா, காலை உணவ ஒழங்கா சாப்பிடாம, வெறும் மருந்த மட்டும் சாப்பிட்டா இது குணமாகாது.. அதையும் புரிஞ்சிக்க..என்றாள் பாட்டி..
பாட்டியின் அறிவுரைகளை கவனத்தில் கொள்ளுமாறு தன் பார்வையாலேயே பேத்திக்குஅறிவுறுத்திய மீனாட்சி, அவளை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள்.
Post a Comment