சமையல் டிப்ஸ் !!! -- வீட்டுக்குறிப்புக்கள்,
ரவை , பாசிப்பயறு , சேமியா , போன்றவற்றை புழு பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற , அவற்றை லேசாக வறுத்து , காற்றுப்போகாத கொள்கலன்களில் சேமிக்க...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_3714.html
ரவை, பாசிப்பயறு, சேமியா, போன்றவற்றை புழு பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற, அவற்றை லேசாக வறுத்து, காற்றுப்போகாத கொள்கலன்களில் சேமிக்கவும்.
தயிர் கெட்டியாக உறைய வேண்டுமானால் மண் கலயத்தில் உறை ஊற்றவும்.
குளிர் சாதனப்பெட்டியில் கெட்ட வாடை வீசாது இருக்க, உள்ளே ஒரு மூலையில் ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவை ஒரு சிறிய கிண்ணத்தில் வைக்கவும்.
காலிபிளவரில் இருந்து தூசியை நீக்கவும், பூச்சிகளை அழிக்கவும், அதை சிறிது வினிகர் கலந்த தண்ணீரில் மூழ்க வைத்து, சிறிது நேரம் சென்றதும் நீரில் அலசி, பின்னர் சமையல் செய்யவும்.
உப்பு சரசர என்று தூவப் பட வேண்டும் என்றால் சிறிது அரிசியை உப்புடன் சேர்த்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைக்கும் பொழுது சிறிது உப்பைச் சேர்த்தால், எளிதாக உரிக்கலாம்.
குளிர் பானங்களில் கலக்கும் முன் சீனியை மிக்சியில் பொடியாக்கிக் கொண்டால் விரைவில் கலந்து விடலாம்
தயிர் கெட்டியாக உறைய வேண்டுமானால் மண் கலயத்தில் உறை ஊற்றவும்.
குளிர் சாதனப்பெட்டியில் கெட்ட வாடை வீசாது இருக்க, உள்ளே ஒரு மூலையில் ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவை ஒரு சிறிய கிண்ணத்தில் வைக்கவும்.
காலிபிளவரில் இருந்து தூசியை நீக்கவும், பூச்சிகளை அழிக்கவும், அதை சிறிது வினிகர் கலந்த தண்ணீரில் மூழ்க வைத்து, சிறிது நேரம் சென்றதும் நீரில் அலசி, பின்னர் சமையல் செய்யவும்.
உப்பு சரசர என்று தூவப் பட வேண்டும் என்றால் சிறிது அரிசியை உப்புடன் சேர்த்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைக்கும் பொழுது சிறிது உப்பைச் சேர்த்தால், எளிதாக உரிக்கலாம்.
குளிர் பானங்களில் கலக்கும் முன் சீனியை மிக்சியில் பொடியாக்கிக் கொண்டால் விரைவில் கலந்து விடலாம்
வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவவும் அல்லது முன்பே சிறிது நல்லெண்ணையை கையில் தடவிக் கொள்ளவும்.
· தேங்காயை உடைப்பதற்கு முன் தண்ணீரில் நனைத்தால் சரியாக உடையும்.
· காலிபிளவர் சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு போட்டு அதில் சிறிது நேரம் மூழ்க வைத்தால் ஏதேனும் புழு இருந்தால் நீங்கி விடும்.
· குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
· அடை, வடை, தோசை போன்றவை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.
· சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு வேண்டிய புரோட்டின் சத்தும் கிடைக்கும்.
· குலோப்ஜாமூன் செய்யும்போது கடினமாகி விட்டால், ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.
Post a Comment