உளுந்தம் பருப்பு மருத்துவக் குணங்கள்! உணவே மருந்து
உளுந்தம் பருப்பு உளுந்தம் பருப்புடன் இருவாட்சி இலைகளை வதக்கி துவையல் அரைத்து உண்ண பித்தம், மயக்கம், வியர்வை, நாற்றம் குணமாகும். ரத்த கொதிப...
https://pettagum.blogspot.com/2012/02/blog-post_5062.html
உளுந்தம் பருப்பு
- உளுந்தம் பருப்புடன் இருவாட்சி இலைகளை வதக்கி துவையல் அரைத்து உண்ண பித்தம், மயக்கம், வியர்வை, நாற்றம் குணமாகும். ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும். நன்கு பசி எடுக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடல் புற்று நோய், மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
- எலுமிச்சை இலையை நரம்பு நீக்கி உளுத்தம் பருப்புடன் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட பித்தம், தாகம், வாய்கசப்பு நீங்கும். பரு வருவது குறையும். மலச்சிக்கல் நீங்கி பசியெடுக்கும்.
- உளுந்தை தோலுடன் கஞ்சி செய்து சாப்பிடலாம். பருவமடைந்த பெண்களுக்கு உளுந்தை கஞ்சி அல்லது களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்பு வலிமை பெறும்.
- உளுந்து கஞ்சி அல்லது களியை இரவிலும், வயதானவர்களும் தவிர்ப்பது நல்லது. அதிக அளவில் உட்கொண்டால் வயிற்றுக் கடுப்பை உண்டாக்கி பசியைக் கெடுக்கும். மேலும், மலச்சிக்கல் அல்லது கழிச்சல் உண்டாகும்.
- இதற்கு முறிவாக கொள்ளுக்காய் வேளை, மிளகு, சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் சேர்த்து குடிக்க குணமாகும்.
- உளுந்தோதனத்தை அதிகமாக உண்ண மந்தம் உண்டாகும். வாயுவை அதிகமாக்கும். அதேநேரம், பித்தத்தை தணிக்கும். உடலை வலுவாக்கும்.
- உளுந்தை வறுத்து அதனுடன் சிறிது தூதுவளை, புதினா, கொத்தமல்லி, உப்பு கூட்டி துவையலாக்கி பகல் உணவில் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வர நுரையீரல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- உளுந்தம் பருப்புடன் முடக்கறுத்தான் கீரை கூட்டி துவையல் செய்து உண்ண வாத நோய்கள் குணமாகும். மூட்டுக்கள் வலிமை பெறும்.
- உளுந்தம் பருப்புடன் முசுமுசுக்கை இலை, இஞ்சி, புதினா, கறிவேம்பு, கொத்தமல்லி, தேங்காய் சட்னி போல செய்து அடிக்கடி சாப்பிட்டு வர ஜலதோஷம், இருமல்,இரைப்பு,நாவில் ஏற்படும் சுவையின்மை நீங்கும்.
- வறுத்த உளுந்தம் பருப்புடன் அம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலை, ஆகியவற்றை நெய்யில் வதக்கி சேர்த்து,மேலும், பூண்டு, தேங்காய், ஆகியவையும் கூட்டி துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வர நீர்ந்து போன தாதுவை கட்டுப்படுத்தி தாதுவிருத்தியுடன் உடல் பலத்தையும் உண்டாக்கும்.
- உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தான் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.
- உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
- உளுந்தைக் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.
- உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
- உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.
- விஷக்கடிகளுக்கு தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பை வாயிலிட்டு மென்று சிறிது நல்லெண்ணையுடன் விழுங்கி விட விஷம் முறியும்.
- பச்சரிசியுடன் பாதியளவு உளுந்து, சிறிது தேங்காய் கூட்டி அரைத்து, மூன்றையும் கஞ்சி போலக் காய்ச்சி சர்க்கரையும், ஏலக்காயும் சேர்த்து குடித்து வர மார்பு வலி குணமாகும்.
- உளுந்தம் மாவை களியாக கிண்டி சாப்பிட்டு வர நெஞ்சு வலி தீரும். மார்பு படபடப்பு குணமாகும். உடல் பலமடையும்.
- உளுந்தம் பருப்பை வறுத்து, அதனுடன் மிளகு, சீரகம், சேர்த்து பொடியாக்கி நெல்லிக்காய் பொடி சம அளவு சேர்த்து சாப்பிட்டு வர இளமையும், சுறுசுறுப்பும் உண்டாகும்.
- இதனை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ளும் பொடியாக தினமும் பயன்படுத்தி வர சிறந்த பலன் கிடைக்கும்.
- உளுந்தை இரவு நீரில் ஊற வைத்து மறுநாள் அதிகாலையில் இந்த நீரை அருந்தி வர சிறுநீர் பெருகும். நீர் கட்டு, நீர்கடுப்பு, நீர் எரிச்சல், முதலியவை குணமாகும்.
- உளுந்தின் வேரை நிர்விட்டு மைபோல அரைத்து சூடாக்கி, பொறுக்கக் கூடிய சூட்டில் வைத்துக் கட்டிவர மூட்டு வீக்கம் குணமாகும்.
Post a Comment