ஊறுகாய் டிப்ஸ்--வீட்டுக்குறிப்புக்கள்,
(1)எலுமிச்சை,நார்த்தங்காய் உப்பு போடும்போது அதனுடன் வினிகரில் ஊறவைத்த ஆறஞ்சுத் தொலியும் சேர்த்தால் மணமும் ருசியும் கூடுதலாக கிடைக்கும்...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_8663.html
(1)எலுமிச்சை,நார்த்தங்காய் உப்பு போடும்போது அதனுடன் வினிகரில்
ஊறவைத்த ஆறஞ்சுத் தொலியும் சேர்த்தால் மணமும் ருசியும்
கூடுதலாக கிடைக்கும்.
(2)2ஸ்பூன் சீனிபோட்டு கொதித்த தண்ணீரில் நாரத்தையை 10நிமிடம்
போட்டு மூடிவைத்தால் அதனுடைய கசப்புச்சுவை குறைந்துவிடும்.
(3)ஊறுகாயில் பூஞ்சை ஏற்படாமல் தடுக்க இலேசான துணியில்
நல்லெண்ணெயை முக்கி ஊறுகாயின் மேல் போடவும்.
(4)வினிகர் சேர்த்த ஊறுகாய்க்களுக்கு சீனி சேர்ப்பது நல்லது.
(5)ஊறுகாய்க்கு நல்லெண்ணெய் சேர்க்கும்போது நன்கு சூடாக்கி,
பிறகு நன்கு குளிரவைத்து சேர்க்கவும்.
(6)மஞ்சள்த்தூள் ஊறுகாய்க்கு மணம் கொடுப்பது மட்டுமல்லாமல்
கெட்டுப்போகாமலும் பாதுகாக்கும்.
(7)காய்கறிகள் ஊறுகாயில் சேர்க்கும்போது கழுகி நன்கு துடைத்து,
ஈரம் போனபின் 1/2 மணிநேரம் வெயிலில் வைத்து எடுத்தபின்
ஊறுகாய் போட்டால் கெட்டுப்போகாது.
(8)இரால் ஊறுகாய் செய்வதற்கு சிறிய இரால் பயன்படுத்துவதே நல்லது.
(9)ஊறுகாய் செய்தபின் உடனே பயன்படுத்தாமல் 2 வாரத்திற்குப் பின்
பயன்படுத்துவதே அதிகம் ருசி ஏற்பட உதவும்.
(10)நல்ல கழுவி,வெயிலில் காயவைத்த பாட்டில்களையே ஊறுகாய்
வைக்க பயன்படுத்தவும்.
(11)ஊறுகாய் பாட்டலை எப்போதும் நன்கு மூடியே வைக்கவும்.
(12)ஊறுகாய் பாட்டிலில் எப்போதும் ஸ்பூன் போட்டு வைப்பது
நல்லதில்லை.விரைவில் கெட்டுப்போக இது காரணமாகும்.
Post a Comment