மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஷபானா! சபாஷ் பெண்ணே!!---உபயோகமான தகவல்கள்

சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றி வரும், 25 வயதான ஷபானா, காது கேட்காத, வாய் பேச முடியாதவர்கள்; வழக்கு விஷயங்களுக்காக தேடி வந்துவிட்டால் போதும்......

சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றி வரும், 25 வயதான ஷபானா, காது கேட்காத, வாய் பேச முடியாதவர்கள்; வழக்கு விஷயங்களுக்காக தேடி வந்துவிட்டால் போதும்... அவர் களுக்காக, கட்டணம் பெறாமல் வாதாடி, நீதியைப் பெற்றுக் கொடுக்கிறார். இப்படி ஒரு சமூக சேவையில் ஆர்வம் வந்தது எப்படி? என்று கேட்டதற்கு, அவர் கூறிய பதில்: கடந்த 2009-ம் ஆண்டில் ஒரு நாள், தன் தந்தையை மீட்டுத் தருமாறு, ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனு செய்திருந் தார் ஒருவர். வாய் பேச முடியாத, காது கேட்காத தன் தந்தையை, சொத்துக்காக, அவரது உறவினர் கள் சிலர், அவர்களது வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகவும், வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கி, தன் தந்தை பெயரில் இருந்த சொத்துக்களை வாங்கி கொண்டதாகவும், அந்த நபர், தன் மனுவில் கூறியிருந்தார். கோர்ட் உத்தரவின் பேரில், வீட்டில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்ட, காது கேட்காத, வாய் பேச முடியாத பெரியவர், கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரிடம் மகனுடன் செல்கிறீர்களா அல்லது சொந்தக்காரர்களுடன் செல்கிறீர்களா? என்று கேட்டார். ஆனால், அவரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. அப்போதுதான், அவருக்காக பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வாய் பேச முடியாத, காது கேட்காதவர்கள் பேசும், சைகை பாஷை எனக்கு தெரியும் என்பதால், நீதிபதி கேட்ட கேள்விகளை, அந்த பெரியவரிடம் கேட்டேன். அப்போது தான், சொத்துக்காக உறவினர்கள் செய்த கொடுமைகளை விவரித்தார். அவர் கூறியதை நீதிபதியிடம் எடுத்துக்கூறி, நல்ல தீர்ப்பு வாங்கிக் கொடுத்தேன். நான் இந்த வழக்கில், சிறப்பாக வாதாடியதற்காக, தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் சார்பில், எனக்கு விருதும் கிடைத்தது. இந்த வழக்கிற்கு பின், தமிழகத்தில் உள்ள எந்த கோர்ட்டிலும், வாய் பேச முடியாத, காது கேட்காதவர்களுக்காக நான் ஆஜராகி வாதாடுவதற்காக, என் பெயரை, பரிந்துரை செய்தார் நீதிபதி. ஆனால், அதற்கான உத்தரவுதான் ஏனோ இன்னும் வரவில்லை. அந்த உத்தரவு வந்த பிறகு, தமிழகம் முழுவதும் சென்று, வாய் பேச முடியாத, காது கேட்காதவர்களுக்காக வாதாடுவேன். வாய் பேச முடியாத, காது கேட்காதவர்களுடன் பேசும் சைகை மொழியை எப்படி கற்றுக்கொண்டேன் என்றால், என் தந்தையின் நண்பர் ஒருவருக்கு வாய் பேச முடியாது; காதும் கேட்காது. அவரது மனைவியும் அப்படித் அந்த மாமாவின் மடியில் வைத்துதான், எனக்கு பெயர் சூட்டினர். மேலும், அவரது வீட்டில் தான், நான் வளர்ந்தேன். அவர்களது வீட்டிலேயே நான் வளர்ந்த தால், அவர்களின் சைகைமொழி, எனக்கு நன்றாகத் தெரியும். மேலும், என் தந்தையும் அவர்களுக்கு நிறைய உதவிகள் செய்வார். அதை பார்த்து வளர்ந்த நானும், என் அப்பா வழியில், இப்போது என்னால் முடிந்த உதவிகளை, மற்றவர்களுக்கு செய்து வருகிறேன். நம்மால் வாய் பேச முடியும், காதால் கேட்க முடியும். அப்படியிருந்தும் நம்முடைய பேச்சில், சில நேரங்களில், தவறு ஏற்பட்டு விடலாம். ஆனால், வாய் பேச முடியாத, கேது கேட்காதவர்கள், அப்படி இல்லை. அவர்களுக்கு ஒரு விஷயத்தை உள்வாங்கும் திறன், கவனிக்கும் திறன் அதிகம். அதே நேரம் கோபப்படவும் செய்வர். அவர் களிடம் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. தங்களது வேலையை, தாங்களே செய்து கொள்வர். நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பர். எந்த முடிவு எடுத்தாலும், நல்ல முடிவாக எடுப்பர். இவர்களுக்காக நான் எப்பொழுதும் உதவி செய்ய காத்திருக்கிறேன். அவர்களது வழக்குகளுக்காக, கண்டிப்பாக பணம் வாங்கமாட்டேன்...' என்று பெருந்தன்மையுடன் கூறும் ஷபானா, இந்த சின்ன வயதிலேயே, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.

Related

உபயோகமான தகவல்கள் 2244771253652694568

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item