தெரிந்த விஷயம்தான்---வீட்டுக்குறிப்புக்கள்
சென்னா மசாலா செய்யும்போது சென்னாவை வேக வைக்கும்போது பாதி அளவு மசாலா மற்றும் உப்பையும், அதனை வெங்காயம், தக்காளியுடன் வதக்...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_7852.html
சென்னா மசாலா செய்யும்போது சென்னாவை வேக வைக்கும்போது பாதி அளவு மசாலா மற்றும் உப்பையும், அதனை வெங்காயம், தக்காளியுடன் வதக்கும்போது பாதி மசாலா, உப்பையும் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
பிரிஞ்சி சாதம் செய்யும்போது, முதலில் வெங்காயத்தைப் போட்டு வதக்கிவிட்டு, பின்னர் அனைத்து காய்கறிகளையும் போட்டு வதக்கிய பின்புதான் தக்காளியைப் போட்டு வதக்க வேண்டும்.
தேங்காய் அரைத்து ஊற்றி வைக்கும் காரக் குழம்புகளில், தேங்காயை அரைத்து அப்படியே சேர்க்காமல், தேங்காய் பாலை மட்டும் எடுத்து சேர்த்துப் பாருங்கள். சுவை வித்தியாசமாக இருக்கும். எல்லோரும் உங்களிடம் செய்முறை கேட்பார்கள்.
அரிசியோ, பருப்போ ஊறவைக்கும்போது அதில் ஒரு இரும்புக் கரண்டியைப் போட்டு வைத்தால் உடனே ஊறிவிடும்.
ரவா கேசரி செய்யும்போது கலருக்காக கேசரிப் பவுடரை கலப்பதற்குப் பதில், மஞ்சள் நிறத்திலுள்ள சாதாரண வைட்டமின் மாத்திரையான பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை இரண்டை கலந்து விட்டால் நல்ல நிறமும் கிடைக்கும். உடம்பிற்கும் நல்லது.
Post a Comment