பாயாசம் டிப்ஸ்--வீட்டுக்குறிப்புக்கள்
பாயாசம் மிஞ்சிவிட்டால் அதனை வற்ற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிராக சாப்பிடவும்.ருசியாக இருக்கும். பாயாசத்தில் இனிப்பு கூடிவிட்டால் 1 க்ளாஸ்...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_5638.html
பாயாசம் மிஞ்சிவிட்டால் அதனை வற்ற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிராக சாப்பிடவும்.ருசியாக இருக்கும்.
பாயாசத்தில் இனிப்பு கூடிவிட்டால் 1 க்ளாஸ் பால் கூடுதல் சேர்த்தால் போதும்.
அரிசி நன்கு வெந்த பிறகுதான் சர்க்கரை,சீனி சேர்க்கவும்.இல்லையேல் பிறகு அரிசி வேகாது.
சர்க்கரைப்பாயாசத்தில் சுக்கும்,ஜீரகமும் பொடியாக்கி சேர்த்தால் ருசி கூடும்.
பாயாசம் வற்றி மிகவும் கெட்டியாகிவிட்டால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.அல்லது பசும்பால் சேர்க்கலாம்.
சேமியாவை நெய்யில் வறுத்தபின் பாயாசத்தில் சேர்த்தால் குழைந்துப் போகாது.
முந்திரிப்பருப்பு பாயாச்த்திற்கு இல்லையென்றால் வேர்க்கடலை நெய்யில் வறுத்து சேர்த்தால் போதும்.
பால்ப்பாயாசம் செய்யும்போது பச்சரிசியை நல்ல வேகவில்லையென்றால் சர்க்கரை சேர்க்கும்போது கல்லாக ஆகிவிடும்.
Post a Comment