சேமியா பகோடா - சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் கடலை பருப்பு - 3மே.க கடலை மாவு - 1கப் சோள மாவு - 1கப் சேமியா -1/2கப் எண்ணெய் - தேவைக்கேற்ப பச்சை மிளகாய் - 4 கருவேப்பிலை ...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_5512.html
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 3மே.க
கடலை மாவு - 1கப்
சோள மாவு - 1கப்
சேமியா -1/2கப்
எண்ணெய் - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 4
கருவேப்பிலை -2நெட்டு
பெரிய வெங்காயம் -1
மிளகுத் தூள்,சீரகத் தூள் -1/2தே.க
உப்பு தேவையான- அளவு
பெருங்காயத் தூள் - சிறிதளவு
செய்முறை
முதலில் கடலைப் பருப்பை 2 மணித்தியாலம் ஊறவைத்த பின் நீரை வடித்து எடுக்கவும். இதே போல் பாத்திரத்தில் நீரை சூடாக்கி அதில் சேமியாவை போட்டு உடனே எடுத்து விடவும். பின் மீண்டும் குளிர்ந்த நீரில் போட்டு நீரில்லாமல் வடித்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் ஓர் பாத்திரத்தில் கடலை பருப்பு, கடலைமாவு, சோளமாவு சேமியா ஆகியவற்றை போடவும். அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கருவேப்பிலையும் கலந்து கொள்ளவும். மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூளும் மற்றும் தேவையான உப்பையும் இக் கலவையில் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசையவும்.
பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை பகோடாவாக போடவும். நன்கு மொறமொறப்பாக பகோடாவை பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் வித்தியாசமான சேமியா பகோடா தயார்.
Post a Comment