சின்ன சின்ன யோசனைகள்---வீட்டுக்குறிப்புக்கள்
ரவா தோசை தயாரிக்குமுன் ரவையை நன்கு வறுத்து 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பிறகு இதர பொருட்களுடன் கலந்து தோசை வார்த்தால் தோசை ஒழுங்கான வடிவில்...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_3128.html
ரவா தோசை தயாரிக்குமுன் ரவையை நன்கு வறுத்து 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பிறகு இதர பொருட்களுடன் கலந்து தோசை வார்த்தால் தோசை ஒழுங்கான வடிவில் வரும். ரவை சரியாக வறுபடாவிட்டால் தோசை வார்த்து எடுக்கும்போது சிதைந்துவிடும்.
பருப்புத் துவையலுக்கு தேங்காய் அவசியமில்லை. இரண்டு பூண்டுப் பல்லை தோல் உரித்து வைத்து, அரைத்தால் சுவையாக இருக்கும். வாய்வுக்கும் நல்லது.
சிறிதளவு புளியை உருட்டி, கடலை எண்ணெயில் போட்டு வைத்தால், எண்ணெய் கெடாதிருக்கும்.
கிராம்பை வெந்நீரில் ஊறவைத்து வடிகட்டி காலை மாலை வேளைகளில் பருகி வந்தால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மசக்கை வாந்தி, கட்டுப்படும்.
சிறிதளவு உப்பைத் தண்ணீரில் கலந்து கீரையை வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது. பச்சையாகவே இருக்கும்.
Post a Comment