வீட்டை மெருகூட்டுவதற்கான வழிகள்--வீட்டுக்குறிப்புக்கள்
வீட்டில் அழுக்குப் படிந்த பாத்திரங்களையும், அடிபிடித்த பாத்திரங்களையும் சுத்தப்படுத்த, அந்த பாத்திரத்தில் கல் ...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_2380.html
வீட்டில் அழுக்குப் படிந்த பாத்திரங்களையும், அடிபிடித்த பாத்திரங்களையும் சுத்தப்படுத்த, அந்த பாத்திரத்தில் கல் உப்பைப் போட்டு நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பிறகு சோப்புப் போட்டு துலக்கினால் பளிச்சென்று ஆகிவிடும்.
வீட்டைத் துடைக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சிறிது உப்புத் தூளைப் போட்டு துடைத்துவிட்டால் ஈக்களின் தொல்லை இருக்காது.
மருதாணி கரைப் பட்டத் துணியை மிதமான சூடானப் பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு சோப்பைப் பயன்படுத்தித் துவைத்தால் மருதாணி கரை போய்விடும்.
மர நாற்காலி அல்லது மர பீரோவில் உள்ள டிராயர்கள் எளிதாக இழுபட வேண்டும் எனில், அதன் உராயும் பகுதிகளில் மெழுகு தடவி வைக்கலாம்.
Post a Comment