சமையல் சமாச்சாரம்---வீட்டுக்குறிப்புக்கள்
பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெயின் மேல் ஒரு வெள்ளை லேயர் வரக்கூடும். அந்த வெள்ளை லேயரை எடுத்து சிக்கன் அல்லது மட்டன் செய்யும்போது வெண்ணெய்க்க...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_23.html
பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெயின் மேல் ஒரு வெள்ளை லேயர் வரக்கூடும். அந்த வெள்ளை லேயரை எடுத்து சிக்கன் அல்லது மட்டன் செய்யும்போது வெண்ணெய்க்கு பதிலாக பயன்படுத்தலாம்.
பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்.
தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.
ஆம்லெட் போடும் போது, கல்லில் ஊற்றிய பிறகு அதன்மீது ஸ்வீட் பிரட்டை பொடியாக உதிர்த்து, பரவலாகத் தூவி விட்டு, வேக வைத்து எடுத்தால் ஆம்லெட் சுவையாய் இருக்கும். அப்படியே சாப்பிடலாம்.
மிளகுப் பொடியைத் தவிர்த்து விடவும். பொடியாய் நறுக்கின பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
Post a Comment