அங்காயப் பொடி--பொடி வகைகள்
அங்காயப் பொடி ஜீரணத்துக்கு ரொம்ப நல்லது. தேவையான அளவு அரைத்து ஜிப் லாக்கில் போட்டு freeze செய்தால் கண்டிப்பாய் ஆறு மாதம் வரை வரும். இ...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_6241.html
அங்காயப் பொடி
ஜீரணத்துக்கு ரொம்ப நல்லது. தேவையான அளவு அரைத்து ஜிப் லாக்கில் போட்டு freeze செய்தால் கண்டிப்பாய் ஆறு மாதம் வரை வரும்.
இந்தப் பொடியை சூடான சாதத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு போட்டு, நல்லெண்ணையை காய்ச்சி ஊற்றிக் கொண்டு, (விரலை சுட்டுக்கொள்ளாமல்) கலந்து சாப்பிட்டால், வயிற்றுக்கு நல்லது. ஜுரத்தால் அல்லது நீண்ட விமான/ரயில் பயணத்தால், வாயில் கசப்பான உணர்வு இருக்குமே, அப்போது சாப்பாடு எதுவும் வாய்க்கு ருசிக்காது. இந்த பொடிசாதம் அப்போது அருமையாக இருக்கும்.
இதற்கு தொட்டுக் கொள்ள சுட்ட அரிசி அப்பளம் அல்லது டாங்கர் மாவு பச்சடி அருமையாக இருக்கும்.
கீழே உள்ள அளவுக்கு ஒருவர் தினமும் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு (சாத்தில் கலந்து) சாப்பிட்டால் பதினைந்து நாட்கள் வரை வரும்.
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
சுண்டைக்காய் - 100 கிராம்
வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு (உலர்ந்தது)
மணத்தக்காளி - 100 கிராம்
சுக்கு - சுண்டு விரல் நீளம் ஒரு துண்டு
அல்லது எவரெஸ்ட் பிராண்ட் சுக்கு பொடி - மூன்று டீஸ்பூன்
மிளகு - எண்ணிக்கையில் 21
ஜீரகம் - 1 டீஸ்பூன்
கல் உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
அடிகனமான வாணலியை அடுப்பில் வைக்கும் முன், நல்லெண்ணெய் சிறிது விரலில் தொட்டுக் கொண்டு வாணலியில் தடவி விட்டு, சூடான பின் சுண்டைக்காயை போட்டு நன்றாக கலகலவென்று (அப்டியே சப்தம் கேட்கும்) வறுத்துக் கொள்ளுங்கள். தட்டில் போட்டு ஆற விடுங்கள்.
கருவேப்பிலையை நன்றாக அலசிக் கொண்டு, துண்டில் போட்டு நிழல் உலர்த்தலாக உலர்த்தி, சுண்டைக்காய் மாதிரியே கல கலவென்று சத்தம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
வேப்பம் பூ, பின் மணத்தக்காளி, பின் மிளகு, அப்புறம் ஜீரகம் என்று தனித் தனியாக அதே வாணலியில் வறுத்து தனித் தனியாகவே ஆற விடுங்கள். கல் உப்பையும் அடுப்பை அணைத்த பிறகு வாணலியில் போட்டு வைத்தால் வாணலி சூட்டிலேயே காய்ந்து கொண்டு ஈரம் இல்லாமல் இருக்கும்.
கல் உப்பையும் மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் தனித்தனியா மிக்சியில் போட்டு நன்றாக பொடித்துக் கொண்டு கடைசியில் ஒன்றாகக் கலந்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.
Post a Comment