பேரீச்சம்பழ இலை அடை -- வீட்டுக்குறிப்புக்கள்
பேரீச்சம்பழ இலை அடை தேவையானவை: அரிசி மாவு, மைதா மாவு, - தலா கால் கிலோ, பால் - அரை லிட்டர், பால் பவுடர் - கால் கப், பேரீச்சம்பழம் - ஒரு கப...
தேவையானவை: அரிசி மாவு, மைதா மாவு, - தலா கால் கிலோ, பால் - அரை லிட்டர், பால் பவுடர் - கால் கப், பேரீச்சம்பழம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், முந்திரி - 20, ஏலக்காய்த்தூள், நெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை: பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து அதில் அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
முந்திரியை நன்கு பொடித்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பேரீச்சம்பழத்தை ஊற வைத்து நைஸாக அரைத்து... அதனுடன் தேங்காய் துருவல், பால் பவுடர், பொடித்த முந்திரி, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வாணலியில் லேசாக புரட்டவும். பூரணம் தயார்.
நறுக்கிய வாழை இலையை ஒரு தட்டில் வைத்து, மாவுக் கலவையை விட்டு ஒரு ஸ்பூனில் பூரணத்தை வைத்து, இலையின் மறுபாதியால் மூடி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
பேரீச்சம்பழ இலை அடை: பேரீச்சம்பழத்துடன், உலர்ந்த திராட்சை சிறிதளவு சேர்த்தால்... சுவை, மணம் கூடும்.
Post a Comment