உருண்டை குழம்பு -- சமையல் குறிப்புகள்
உருண்டை குழம்பு ...
https://pettagum.blogspot.com/2011/11/blog-post_5729.html
தேவையான பொருட்கள்:
து பருப்பு - 1 கப்
உப்பு - சிறிது
நறுக்கிய ப மிளகாய் - 2
கடுகு - சிறிது
எண்ணெய் 2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 2
அரிசி மாவு - கைப்பிடி
சிறிது கொத்தமல்லி, கறிவேப்பிலை
புளி - சிறிது
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை
பருப்பை ஊற வைத்து நீர் வடித்து, உப்பு சேர்த்து சற்று கரகரப்பாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி அரைத்த பருப்பை போடவும்.
பருப்பு வெந்து நிறம் மாறியவுடன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
வதங்கிய மாவில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
புளியை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். கடுகு தாளித்து, புளி தண்ணீரில், உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு சேர்ந்து கொதிக்கும் போது, பருப்பு உருண்டைகளை போட்டு, அடுப்பை குறைத்து எரிய விடவும். வெந்தவுடன் உருண்டைகள் மேலே மிதந்து வரும். அவற்றை உடையாதவாறு கிளறி இறக்கவும்.
3 comments
தமிழ் இணைய உலகில் சினிமாவை மட்டுமே நம்பி பலர் காலம் ஓட்டும் வேளையில் நல்ல பயனுள்ள பதிவுகளை வெளியிட்டு வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்!http://www.sinthikkavum.net/2011/11/blog-post_14.html
தமிழ் இணைய உலகில் சினிமாவை மட்டுமே நம்பி பலர் காலம் ஓட்டும் வேளையில் நல்ல பயனுள்ள பதிவுகளை வெளியிட்டு வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
மறக்க முடியுமா குஜராத் இனப்படுகொலையை! http://www.sinthikkavum.net/2011/11/blog-post_10.html
தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் பல! தொடர்ந்து பயன்படுத்திட விழைகின்றேன். அன்புடன் A.S. முஹம்மது அலி
Post a Comment