பூண்டு-வெங்காயக் குழம்பு தேவையானவை: நாட்டுப் பூண்டு – 4 பல், சாம்பார் வெங்காயம் – 10, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு காய...
பூண்டு-வெங்காயக் குழம்பு
தேவையானவை:
நாட்டுப் பூண்டு – 4 பல்,
சாம்பார் வெங்காயம் – 10,
சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 1
கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம்,பெருங்காயம் – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – அரை கப்,
கறிவேப்பிலை ,கொத்தமல்லி – சிறிதளவு,
புளித் தண்ணீர் – ஒரு கப்.
செய்முறை:
பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை , கொத்தமல்லி தாளித்து, உரித்த பூண்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் சாம்பார் பொடியைப் போட்டு வறுத்து, புளித் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.
விருப்பப்பட்டால் கொதிக்கும்போது . தக்காளியும் சேர்க்கலாம். ருசி கூடும்.
2 comments
4 பல் பூண்டு போதுமா??
புளிகுழம்பில் சாம்பார் பொடி- செம... செம... நானும் நிறைய முறை இது போல் மாத்தி செஞ்சுருக்கேன்...:-)
வாசித்தாலே தெரியுது.. எந்த அளவுக்கு அருமையா இருக்கும்னு
நேரம் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்
அப்பறம் சகோ
பாலோவர் பாக்ஸ் வைக்கலாமே.. :-)
அன்புச்சகோதரி ஆமீனா அவர்களுக்கு அன்புடன் அஸ்ஸலாமு அலைக்கும்! தங்களின் கருத்துக்கள் கண்ணுற்றேன். pettagum.blospot ல்-விரைவில் followers இணைக்கின்றேன். தொடர்ந்து கருத்துக்களை நாடும் அன்பன் A.S. முஹம்மது அலி
Post a Comment