கேழ்வரகு கூழ் -- சமையல் குறிப்புகள்
கேழ்வரகு கூழ் ...
https://pettagum.blogspot.com/2011/11/blog-post_1198.html
தேவையானவை
கேழ்வரகு - 1/4 கிலோ
மோர் மிளகாய் - 4
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மோர் - ஒரு கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கேழ்வரகை நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கழுவி, மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், மோர் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, மோர் மிளகாய் போட்டு தாளிக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கரைத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு அடிபிடிக்காமல் கிளறி, கூழ் பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆற வைத்து அருந்தவும்.
கையை ஈரமாக ஆக்கிக் கொண்டு கூழைத் தொடும்போது.. கையில் ஒட்டாத பதத்திற்கு வர வேண்டும். அப்போதுதான் கேழ்வரகு வெந்திருக்கும்.
Post a Comment