வீட்டுக் குறிப்புகள் ..டிப்ஸ்..டிப்ஸ்
வீட்டுக் குறிப்புகள் .. * உரல், அம்மி, கிரைண்டர் போன்றவற்றை வாங்கியவுடன் தவிடு போட்டு அரைத்தால் அதில் உள்ள துளைகள் அடைபட்டுவிடும். எனவ...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_978.html
வீட்டுக் குறிப்புகள் ..
* உரல், அம்மி, கிரைண்டர் போன்றவற்றை வாங்கியவுடன் தவிடு போட்டு அரைத்தால் அதில் உள்ள துளைகள் அடைபட்டுவிடும். எனவே, தவிட்டுக்குப் பதிலாக வெங்காயத்தைப் போட்டு அரைத்தால், சிறு மணலும் கல் துகள்களும் வெங்காயத்துடன் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்.
* துணியில் உள்ள வெற்றிலைக் கறையை போக்க எலுமிச்சம் பழத்தின் தோல் அல்லது புளித்த மோரை வெற்றிலைக் கறையின் மீது தடவினால் கறை மாயமாகி விடும்.
* தோசைக்கல் அல்லது வாணலியில் எண்ணெய் பிசுபிசுப்பை போக்க மிதமான சூட்டில் இருக்கும்போது, அவற்றின் மேற்பரப்பில் சிறிது மோர் விட்டு தேங்காய் நாரினால் அழுத்தித் தேய்த்துக் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு சட்டெனப் போய்விடும்.
* மூன்று நாட்கள் தொடர்ந்து எலுமிச்சம் தோலை குக்கரில் அடியில் ஊறிய பிறகு அதனை எடுத்து தேய்த்தால் குக்கரைப் பிடித்திருந்த கறை தனியாக வந்துவிடும்.
* கறை இருந்த இடத்தில் ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய் விட்டு அரை மணி நேரம் கழித்து சோப்பு நீரில் துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
* சமைக்கும் போது ஒரு ஸ்பூன் சிட்ரிக் அமிலத்தை விட்டு, தண்ணீர் ஊற்றி குக்கரை உபயோகித்தால் கறுப்புக்கறை நீங்கி குக்கர் புதிது போல் ஆகி விடும்.
* போரிக் பவுடரையும், கோதுமை மாவையும் சம அளவு எடுத்து நீரில் கரைத்து கொதிக்க விடுங்கள். அந்தக் கலவை பசை போல் மாறியதும் இறக்கி, ஆறிய பின்னர் அந்தப் பசையை சிறு சிறு உருண்டைகளாக்கி வெளியிலும் காய விடுங்கள். பின்னர் அந்த உருண்டைகளை சமையலறை அலமாரி மற்றும் கரப்பான் தொல்லை உள்ள இடங்களில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.
* வீட்டில் எப்போதும் எறும்புத் தொல்லையா? 2 தேக்கரண்டி தண்ணீர்,
1 தேக்கரண்டி வினிகர், 2 தேக்கரண்டி சோப்புக் கரைசல் இதனைக் கலந்து எறும்பு வரும் இடங்களில் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாக மறைந்துவிடும்.
*மெழுகுவர்த்திகளைப் ஃப்ரீசரில் வைத்து உபயோகித்தால் நீண்ட நேரம் உருகாமல் இருக்கும்.
*திரைச்சீலைகளில் உள்ள இரும்பு வளையங்கள் சுலபமாக நகர, அந்த இரும்பு தடியின் மீது சிறிது பாரஃபின் மெழுகைத் தடவி வைக்க வேண்டும்.
*உடைந்து போன கண்ணாடிப்பொருள்களைத் தண்ணீரில் நனைத்து உருண்டையாக்கிய பஞ்சைக்கொண்டு எடுத்தால் சுலபமாக வந்துவிடும்.
*நறுக்கிய வெங்காயத்தின் உள்பகுதி மூலம் தோல்பொருட்களைத் துடைத்துவிட்டு, பின்னர் துணியால் துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.
*முகப்பவுடரின் வாசனை குறைந்துவிட்டால், டப்பாவுடன் ஒரு சில மணி நேரங்களுக்கு வெய்யிலில் வைக்கவும். பவுடர் வாசனை வீசும்.
*புதியதாகப் பெயிண்ட் அடித்த இடத்தில், அந்த வாசனை சீக்கிரம் போக, தண்ணீர் நிரம்பிய வாளியை வைக்கவும். அது பெயிண்ட் வாசனையை சீக்கிரம் உறிஞ்சிவிடும்.
*கறுத்துப்போன வெள்ளிசாமான்களைத் தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பாலீஷ் போட்டதுபோல் பளபளக்கும்.
*ஈக்களின் தொல்லை போக, நச்சு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப்பதிலாக வீட்டைச் சுற்றி தக்காளி செடிகளை வளர்க்கலாம். ஈக்கள் தொல்லை ஒழியும். சமையலுக்குத் தக்காளியும் கிடைக்கும். இரட்டை நன்மை.
Post a Comment