கன்னியாகுமரி 'முந்திரிக் கொத்து’! -- சமையல் குறிப்புகள்
கன்னியாகுமரி 'முந்திரிக் கொத்து’! ''கன்னியாகுமரி மாவட்டத்துல தீபாவளி மட்டுமில்ல... திருமணம், மறுவீடு, வளைகாப்புனு எல்லா விசேஷங...
கன்னியாகுமரி 'முந்திரிக் கொத்து’!
''கன்னியாகுமரி மாவட்டத்துல தீபாவளி மட்டுமில்ல... திருமணம், மறுவீடு, வளைகாப்புனு எல்லா விசேஷங்கள்லயும் முந்திரிக் கொத்துக்கு முக்கிய இடம் உண்டு. அதிலும் நாகர்கோவில், 'ஸ்டார் முறுக்குக் கடை' முந்திரிக் கொத்து ஸ்பெஷல் கிரேடுதான்'' என்று சிரிக்கும் கடையின் பணியாளர் முத்து, அதன் செய்முறை பக்குவத்தைச் சொன்னார்.
தேவையான பொருட்கள்: சிறுபயறு (பச்சைப் பயறு) - ஒரு கிலோ, கருப்பட்டி - முக்கால் கிலோ, தேங்காய் - ஒன்று, ஏலக்காய் - 10, சுக்கு - ஒரு துண்டு, எள் - 100 கிராம், பச்சரிசி - அரை கிலோ, மஞ்சள்தூள் - சிறிதளவு, இத்துடன் தேங்காய் எண்ணெய் தேவையான அளவு.
பச்சரிசி மாவு, சிறிதளவு மஞ்சள்தூள் இரண்டையும் கெட்டியாக தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிடித்து வைத்திருக்கும் பயறு உருண்டையை, பச்சரிசி மாவுக் கலவையில் நனைத்து எடுத்து, போடவும். கரண்டியால் உருண்டைகளை திருப்பிவிட்டு, எல்லா பகுதிகளும் வேகும்படி செய்யவும். சுருசுரு சத்தம் நின்ற ஓரிரு நிமிடங்களில் எடுத்துப் பரிமாறலாம்.
குறிப்பு: எண்ணெயில் மாவை போட்டதும், உருண்டைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு, முந்திரிக் கொத்து போல இருப்பதால் தான் இதற்கு முந்திரிக் கொத்து என்று பெயர்.
Post a Comment