அதிரசம்:-சமையல் குறிப்புகள்
அதிரசம்: ஒரு கிலோ பச்சரிசியை களைந்து, உலர்த்தி, மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ வெல்லத்தில், சிறிது தண்ணீர் விட்டு, அடுப்பில் வை...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_8498.html
அதிரசம்: ஒரு கிலோ பச்சரிசியை களைந்து, உலர்த்தி, மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ வெல்லத்தில், சிறிது தண்ணீர் விட்டு, அடுப்பில் வைக்க வேண்டும். வெல்லப் பாகு கரைந்து வரும் போது, கரண்டியில் சிறிது எடுத்து, ஏற்கனவே கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு, அதில் போட்டு உருட்டினால், கோலி குண்டு போல திரண்டு வர வேண்டும்.
இது தான் அதிரசத்துக்கான வெல்லப் பாகு எடுக்கும் பக்குவம். பின், அரிசி மாவு சேர்த்து, அடி பிடிக்காமல் கிளறி எடுக்கலாம். அரிசி மாவு எடுக்கும் பக்குவம் இது. காலையில் பாகெடுத்து, மாலையில் அதிரசம் தட்டிப் போட்டால், மென்மையாக இருக்கும். இரவு பாகெடுத்து, காலையிலும் தட்டிப் போடலாம். அதிரசத்தின் சுவைக்கு இது தான் ரகசியம். பாகெடுத்த உடனே தட்டினால், கரகரவென்று இருக்கும்.
Post a Comment