சர்வாங்காசனம்-செய்முறை:-பயன்கள்
சர்வாங்காசனம் செய்முறை : விரிப்பில் மல்லாந்து படுத்தநிலையில் இரு கால்களையும் இணையாக தலைக்கு மேல் செங்குத்தாக தூக்கவும். இரு கால்களையும் தல...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_10.html
சர்வாங்காசனம்
செய்முறை:
விரிப்பில் மல்லாந்து படுத்தநிலையில் இரு கால்களையும் இணையாக தலைக்கு மேல் செங்குத்தாக தூக்கவும். இரு கால்களையும் தலைக்கு பின்னால் கொண்டு போய்விடுங்கள். அதனால் இடுப்புபகுதி தூக்கியவாறு இருக்கும். இடுப்பு பகுதியை தூக்கியபின் இரு உள்ளங்கைகளையும் நடுமுதுகில் வையுங்கள்.
கால்களை கொஞ்சம் பின்னுக்கு தள்ளி செங்குத்தாக நேர்க்கோட்டில் நிறுத்தவும். உங்களின் கண்கள் மேலிருக்கும் இரு கால்கட்டை விரல்களை பார்க்கட்டும். கீழ்த்தாடைப்பகுதி நெஞ்சில் ஒட்டியிருக்க வேண்டும். கழுத்து பிடரி சரியாய் தரையில் படிய அமையுங்கள். ஆசனத்தின் போது உடலியக்கத்துடன் சுவாசமும் இயல்பாய் இருப்பது அவசியம்!
பயன்கள்:
சிரசாசனம் சக்கரவர்த்தி என்றால், சர்வாங்காசனம், `மகாராணி'. பிடரியிலுள்ள நாளமில்லா பிட்யூட்டரி சுரப்பியை நோக்கி புது ரத்தம் பாய்வதால், உடம்பில் சுறுசுறுப்பு வந்துசேரும். தைராய்டு, தைமஸ் ஆகியவற்றின் சுரப்பும் அருமையாக இருப்பதால், சரியான வளர்சிதை மாற்றம் அமையும். தைராய்டு குறைபாடுகள் அகலும். இது மச்சாசனத்துக்கு மாற்றுஆசனமும்கூட!
குண்டானவர்கள், மருந்து சாப்பிட்டு குரல் மாற்றம் அடைந்தவர்கள், பெண்ணுக்கு மீசை முளைத்தல், தோல் வியாதி, தொண்டையில் சதை வளருதல் போன்ற நோய்கள் குணமாகும். குதிகால் குடைச்சல், முழங்கால் மூட்டு வலி, நரம்பு சுருட்டு, மூலம், முதுகுவலி போன்ற நோய்கள் நீங்கும். கழுத்தெலும்பு தேய்வு (`பாண்டிலிட்டஸ்') குணமாகும். உடலின் எல்லா உறுப்புகளுக்கும் பயன்தரவல்ல ஆசனமிது!
Post a Comment