இட்லி சாம்பார்--சமையல் குறிப்புகள்
இட்லி சாம்பார் (1) தேவையான பொருட்கள்: துவரம்பருப்பு - 1/4 கிலோ + 2 மேசைக்கரண்டி, கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி, மிளகு - 1/2 தே...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_4246.html
இட்லி சாம்பார் (1)
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 1/4 கிலோ + 2 மேசைக்கரண்டி,
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ,
தக்காளி - 2,
காய்ந்த மிளகாய் - 6,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
தனியா - 3 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி,
புளி - ஒரு எழுமிச்சை பழ அளவு,
வெல்லம் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 ஸ்பூன்.
செய்முறை:
1/4 கிலோ துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, குழைய வேக வைக்கவும்.
புளியை 1 டம்ளர் நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, மீதி துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், மிளகு, தேங்காய் துருவல், சீரகம், தனியா, வெந்தயம் தனிதனியாக வறுக்கவும்.
பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, முழு வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
வெங்காயம், தக்காளி நன்கு வதங்கிய பின், வெந்த பருப்பை கரைத்து ஊற்றவும்.
புளித்தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
புளி வாசனை போன பிறகு, அரைத்தவற்றை கொதிக்கும் பருப்புடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இறக்கும் முன் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
-------------------------------------------------------------------------------------------
இட்லி சாம்பார்(2)
தேவையானப்பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
புளி - நெல்லிக்காயளவு
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாகப் போட்டு, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து, கரைத்து 1/2 கப் வரும் அளவிற்கு, புளித் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சாம்பார் வெங்காயத்தை, தோலுரித்து, நீளவாக்கில் ஒன்றிரண்டாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். தக்காளியையும் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூள், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வாசனை வரும் வரை வதங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு அத்துடன் புளித் தண்ணீரைச் சேர்த்து கலந்து, மூடி கொதிக்க விடவும். ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கொதித்தவுடன், வெந்தப்பருப்பைச் சேர்த்து கிளறி விடவும். மீண்டும் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, கீழே இறக்கி வைத்து கொத்தமல்லித் தழையைத் தூவவும்.
எண்ணையில் வறுத்து அரைத்த சாம்பார் உபயோகித்தால், சாம்பார் வாசனையாக இருக்கும்.
இதில், ஒரு உருளைக்கிழங்கு, ஒரு காரட் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, வெங்காயம் வதக்கும் பொழுது அத்துடன் சேர்த்து வதக்கி சேர்க்கலாம். அல்லது விருப்பமான எந்த காயையும் சேர்க்கலாம்.
Post a Comment