ஊருக்கு மட்டும் உபதேசமா? பெட்டகம் சிந்தனை,
ஊருக்கு மட்டும் உபதேசமா? சிலர் பசுத்தோல் போர்த்திய புலிகளாய் இருப்பார்கள். மற்றவர்களிடம், ""நீ நல்லவனாக இரு, நாலுபேருக்கு நன்மைய...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_25.html
ஊருக்கு மட்டும் உபதேசமா?
சிலர் பசுத்தோல் போர்த்திய புலிகளாய் இருப்பார்கள். மற்றவர்களிடம், ""நீ நல்லவனாக இரு, நாலுபேருக்கு நன்மையைச் செய், தர்மம் செய், பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே, பிற பெண்களைப் பார்க்காதே,'' என்றெல்லாம் சொல்வார்கள். "நாட்டுக்கு நன்மை செய்வேன்' என மேடைகளில் முழங்கிவிட்டு, மக்களின் பணத்தைச் சூறையாடிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது பற்றி குர்ஆன் சொல்வதைக் கேளுங்கள். ""ஒரு மனிதன் இறுதித்தீர்ப்பு நாளில் கொண்டு வரப்பட்டு நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும். அக்குடலை எடுத்துக்கொண்டு, அவன் கழுதை செக்கில் சுற்றுவதைப் போல நரகத்தைச் சுற்றுவான். இதைப் பார்த்த மற்ற நரகவாசிகள் ஒன்றுகூடி, அவனிடம், ""உனக்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது? நீ நன்மைகள் புரியும்படி உலகில் எங்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கவில்லையா? இப்படிப்பட்ட நற்செயலைப் புரிந்தும் நீ ஏன் இங்கே வந்தாய்?'' என்று கேட்பார்கள். அந்த மனிதன், ""நான் உங்களுக்கு நன்மை புரியும்படி போதித்துக் கொண்டு இருந்தேன். ஆனால், நானோ அதன் அருகில் கூட செல்லாமல் இருந்தேன்.
தீமைகளை விட்டும் உங்களைத் தடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நானோ அந்தத் தீமைகளைப் புரிந்து கொண்டிருந்தேன்,'' என்று பதிலளிப்பான். இப்படித்தான் இன்று உலகில் பலரும் இருக்கிறார்கள். எனவே வெறும் உபதேசம் செய்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல், அதை வாழ்க்கையில் கடைபிடிக்கவும் வேண்டும். இனியேனும் பிறருக்கு உபதேசிப்பதையே நாமும் பிறருக்கு செய்து இறைவனின் நற்கருணையைப் பெறுவோம். உபதேசத்துக்கு மாறாக நடப்பதைக் கைவிடுவோம்.
Post a Comment