கைமணம்! மல்டி கலர் வெண்ணெய் சீடை
மல்டி கலர் வெண்ணெய் சீடை தேவையான பொருட்கள்: பச்சரிசி - 3 கப், வெண்ணெய் - அரை கப், உப்பு - சிறிதளவு, பெருங்காயப் பொடி - கால் டீஸ்பூன், எண்ண...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_04.html
மல்டி கலர் வெண்ணெய் சீடை
தேவையான பொருட்கள்: பச்சரிசி - 3 கப், வெண்ணெய் - அரை கப், உப்பு - சிறிதளவு, பெருங்காயப் பொடி - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒன்றேகால் கப், ஆரஞ்சு, ரோஸ், பச்சை, மஞ்சள் கலர்கள் - சிறிதளவு.
செய்முறை: பச்சரிசியை நன்றாகக் கழுவி, கல் அரித்து, நீரை வடித்துவிட்டு லேசாக நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் மாவாக பொடித்து, இரண்டு மூன்று முறை சலித்து வைக்கவும்.
பின்னர் பதப்படுத்திய மாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயப் பொடி போட்டு பிசறவும். பிறகு, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். மாவை ஐந்து பாகமாக பிரிக்கவும். ஒன்றை வெள்ளையாக விட்டு மற்ற பாகங்களுக்கு ஒவ்வொரு கலர் போடவும். கலர் ‘லைட்’டாகப் போட்டாலே போதும்.. பொரிக்கும்போது ‘டார்க்’ ஆகிவிடும்.
மாவை பச்சைப் பட்டாணி சைஸில் சீடைகளாக உருட்டிப் பொரிக்கவும். கலர் கலர் சீடை கண்ணைப் பறிக்கும். வாயில் போட்டால், கரையும். பார்க்க அழகாக இருக்கும். கமகமவென்று வாசனையாகவும் இருக்கும்.
மல்டி கலர் வெண்ணெய் சீடை: பொன்னிறமாக வறுத்து, பொடித்த உளுந்து மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரிசி மாவுடன் கலந்து, வெண்ணெயின் அளவை சற்று குறைத்துச் செய்தால் இன்னும் வாசனையுடன் கரகரப்பாக இருக்கும்.
-----------------------------------------------------------------
Post a Comment