கவிதைத்துளிகள்! இணைய நட்பு
இணைய நட்பு இணைய நட்பு - திருமதி. கமலா என் வீட்டுச் சன்னலில் பூ வைத்துப் போனவள் முகம் மட்டும் காட்டவில்லை பூ மட்டும் மணக்க...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_2459.html
இணைய நட்பு
இணைய நட்பு - திருமதி. கமலா
என் வீட்டுச் சன்னலில்
பூ வைத்துப் போனவள்
முகம் மட்டும்
காட்டவில்லை
பூ மட்டும் மணக்கிறது
அவள் மனம் போல
இணைய நட்பு - திருமதி. விதுபா
என் உள்ளம் கவர்ந்துசென்ற
உருவமில்லா ஸ்னேகிதியே!
எங்கே நீ போய்விட்டாய்
ஏன் என்னை அழவிட்டாய்?
திங்கள் தொடங்கி இங்கு
தினம் ஏழும்
காத்திருந்தேன்
எங்கேயோ இருந்துகொண்டு
என்னைச்
சிறைப்பிடித்தாய்...
காலை எழுந்தவுடன்
காப்பியில்லை டீயில்லை
கணினியே கதியென்று
காத்திருக்க
வைத்துவிட்டாய்...
இ மெயிலில்
எழுப்பிவிட்டாய்
வாய்ஸ் மெயிலில்
சிரிக்கவைத்தாய்
வாழ்த்துக்கள் அனுப்பி
என்னை
வானத்தில் பறக்கவைத்தாய்
முகத்தை மட்டும் ஏன்
மறைத்தென்னை சோதித்தாய்?
உன்னோடிருந்த
இனியபொழுதுகளில்
எல்லாத் தளங்களும்
நமக்கென்று நேசித்தேன்
இரவும் பகலுமெல்லாம்
அவற்றையே சுவாசித்தேன்...
இன்று,
நீயில்லாத் தனிமையில்
அத்தனை தளங்களும்
போர்க்களமாய்த்
தெரியுதடி...
இணைய நட்பு - திருமதி. அஸ்மா
என் கவிதைக்கு
கிடைத்தது - ஒரு
இணைய நட்பு!
கவிதைக்கு மட்டுமில்லை
கண்ணா! - கலங்கிடாதே
கண்ணுக்குள் மணியாய்
இணை பிரியா நட்பு
இந்த இணைய நட்பு!!
"கருத்து வேறுபாடு ஒன்றும்
தடையில்லை நட்புக்கு!"
கருத்தாய் சொன்னாய் நீ!
கிடைத்த உன் நட்பு எனக்கு
கடவுளைப் பற்றிய ஈடுபாட்டாலென்றால்
கடவுளுக்கே என் முதல் நன்றி!
கவியில் இன்னும் நடைபழகும்
குழந்தைதான் நான்! - ஆனாலும்
காத்திருந்து கிடைத்த உன் நட்புக்கு
தந்தேன் இதை பரிசளிப்பாய் உனக்கு!
சண்டை போடவா என் நட்புனக்கு
இல்லை திட்டிக்கொள்ளவா? - நம்
சகோதரிகளை சமாதானப்படுத்தவே
இந்த சாக்குபோக்கு - ஆம்!
நீதான் ஐடியா ராணியாச்சே!
இணைய நட்பு - திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ்
நானும் சிலந்தியாய்
வாழ்ந்துவிட்டுதான்
போகிறேன்
வலை தளத்திலே!
தூரத்திலே - தெரியாத
நேரத்திலே
அந்தி வானத்திலே
இரவு நேரத்திலே
பேசுவேன்.. நான்
பின்னிய பிரச்சினையுடன்
அன்னிய மண்ணில் -- வாழும்
நானும்
வாதாடுகிறேன்
வக்கீலாய்!
அழகிய அம்மாவுடன்
நெருங்கிய தோழிகளுடன்
ஆட்சி செய்யும் அண்ணனுடன்
பின்னிய பின்னல்
இந்த அறுசுவை பின்னல்
இணைய நட்பு - திருமதி. அன்னுராஜ்
பல தேசப் பறவைகள்
பாகுபாடு மறந்து
வருடம் முழுதும் உரையாடும்
வேடந்தாங்கல்
நட்பு அலைகளைப் பின்னும்
வலைதளம்
இதயங்களை இணைப்பதால்
இணையம்
பிசிராந்தயார்-கோப்பெருஞ்சோழன் நட்பு
புதிய கோணத்தில்...
கணினி யுகத்தில்
இடுக்கண் களையப்படுகிறது-
இணைய நட்பில்!
Post a Comment