வாசகிகள் கைமணம்! மோதகம்
மோதகம் தேவையானவை: பச்சரிசி ரவை - ஒரு கப், வெல்லத்தூள் - முக்கால் கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்தூள் - ஒ...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_2353.html
மோதகம்
தேவையானவை: பச்சரிசி ரவை - ஒரு கப், வெல்லத்தூள் - முக்கால் கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வாணலியில் நெய்யை ஊற்றி, பச்சரிசி ரவையைக் கொட்டி, வாசம்வரும்வரை வறுக்கவும். பிறகு அடி கனமான வாணலியில், 2 கப் தண்ணீரை ஊற்றி, அது கொதிக்கும்போது, வறுத்த பச்சரிசி ரவையை சேர்த்துக் கிளறவும் (தீயைக் குறைத்து வைத்துக் கைவிடாமல் கிளறவேண்டும். இல்லையெனில் கெட்டிபட்டுவிடும்). ரவை நன்கு உப்புமா போல வெந்துவிடும். பக்கத்தில் இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, கால் கப் தண்ணீர் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டிக் கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி, வெந்த ரவையில் ஊற்றி, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் ஆகிய வற்றையும் சேர்த்து, நன்கு கிளறவும். பூப்பூவாக, உதிராக வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, சிறிது ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். இட்லித் தட்டில் நெய் தடவி, இந்த உருண்டைகளை அடுக்கி, இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வைத்து வேகவிட்டெடுக்கவும்.
மோதகம்: பச்சரிசி ரவையுடன் ஒன்று அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பையும் வறுத்துச் சேர்த்தால், இன்னும் சுவையாக இருக்கும். விருப்பப்பட்டால், முந்திரி சேர்த்து, வேக வைக்கலாம்.
Post a Comment