ரசிக்க.. ருசிக்க! கத்திரிக்காய் புளிக் கொத்சுகள்
கத்திரிக்காய் புளிக் கொத்சு(1) தேவையான பொருள்கள்: பெரிய கத்திரிக்காய் - 1 (250 கிராம்) புளி - எலுமிச்சை அளவு பச்சை மிளகாய் - 4,5 உப்பு - ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_6730.html
கத்திரிக்காய் புளிக் கொத்சு(1)
தேவையான பொருள்கள்:
பெரிய கத்திரிக்காய் - 1 (250 கிராம்)
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 4,5
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது
தாளிக்க:
காய்ந்த மிளகாய் - 1
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
உள்ளே பூச்சி இல்லாத கத்திரிக்காயை எடுத்துக் கொள்ளவும்.
சுற்றிலும் நன்றாக நல்லெண்ணையைத் தடவிக் கொள்ளவும்.
அடுப்பை சிம்’மில் வைத்துக் கொண்டு மெதுவாக கத்திரிக்காயை பர்னர் மேலேயே வைத்து வாட்டவும்
காம்பைப் பிடித்து ஒவ்வொரு பகுதியாகத் திருப்பி திருப்பி, கத்திரிக்காய் முழுவதும் காய்ந்து, தோல் கருகும் அளவுக்கு மெதுவாகச் சுட வேண்டும். (கத்திரிக்காயைச் சுடுவது, கரிபோட்டு எரிக்கும் கும்முட்டி அடுப்பில் இன்னும் சரியாகவும் சுவையாகவும் வரும்…. ஹூம்!)
சுட்டு முடித்ததும் ஆறவைத்து, மெதுவாக மேல்த் தோலை உரிக்கவும். சுலபமாகக் கழண்டுவிடும்.
தோலுரித்த கத்திரிக்காயை மேலாக, மென்மையாக, காம்பைப் பிடித்துக் கொண்டு, தண்ணீரில் கழுவவும். ஒட்டிக் கொண்டிருக்கும் கருத்த தோல்பாகங்கள், கருப்புத் துகள்கள் இருந்தாலும் இந்த முறையில் நீக்கிவிட வேண்டும்.
இப்போது கத்திரிக்காயின் காம்புப் பகுதியையும் வெட்டி நீக்கிவிடவும்.
ஒரு பாத்திரத்தில், சுட்ட கத்திரிக்காய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயைப் போட்டு கையால் நன்கு பிசையவும்.
[பின்னால் லேசாகக் கை எரியும். தேங்காயெண்ணை துடைத்தால் சரியாகி விடும். ]
புளியை மிகக் கெட்டியான பதத்தில் கரைத்துக் கொண்டு, உப்பு, கத்திரிக்காயுடன் பச்சையாகச் சேர்க்கவும்.
எண்ணையைச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
மல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.
---------------------------------------------------------------------------------------
கத்திரிக்காய் புளிக் கொத்சு(2)
தேவையான பொருள்கள்:
பெரிய கத்திரிக்காய் - 1
அல்லது
சிறிய கத்திரிக்காய் - 100 கிராம்
பரங்கிக்காய் - சிறிய துண்டு
தக்காளி - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 15
புளி - நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 2
பொட்டுக் கடலை - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 6
மல்லித் தழை - சிறிய கட்டு
இஞ்சி - சிறிய துண்டு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிக்க - கடுகு, கறிவேப்பிலை
செய்முறை:
பெரிய கத்திரிக்காயாக இருந்தால் மேலே இருக்கும் குறிப்பில் சொல்லியிருப்பதுபோல் சுட்டு, உரித்து மசித்துக் கொண்டு, பரங்கிக்காயை மட்டும் நறுக்கிக் கொள்ளலாம்.
சிறிய கத்திரிக்காயாக இருந்தால், கத்திரிக்காய், பரங்கி இரண்டையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய் மிளகு இரண்டையும் வறுத்து பொட்டுக் கடலை, புளி, கொத்தமல்லி சேர்த்து அரைத்துவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை சுடவைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கி வைத்துள்ள காய்களை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
வெந்து கொதி வந்தபின், அரைத்து வைத்துள்ள மசாலாவும் சேர்த்து மேலும் ஒரு கொதிவிட்டு, இறக்கவும்.
Post a Comment