கைமணம் ! சேனை பப்டி ஜோர் ஜோர் !
சேனை பப்டி ஜோர் ஜோர் ! தேவையானவை: சேனைக்கிழங்கு - முக்கால் கிலோ, கடலை மாவு - 100 கிராம், வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_5928.html
சேனை பப்டி ஜோர் ஜோர் !
தேவையானவை: சேனைக்கிழங்கு - முக்கால் கிலோ, கடலை மாவு - 100 கிராம், வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - முக்கால் டீஸ்பூன், நெய், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேனைக்கிழங்கை தோல் சீவி, குக்கரில் முக்கால் பதத்துக்கு வேக வைத்து, துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி கறிவேப்பிலை, பூண்டு போட்டு நன்றாக வதக்கவும். துருவிய சேனைக்கிழங்கையும் சேர்த்து நன்கு வதக்கவும். கடலை மாவில் சிறிது தண்ணீர் விட்டு உப்பு, மிளகாய்த்தூள். கரம் மசாலாத்தூள் சேர்த்து நீர்க்க கரைத்து, சேனை கலவையில் கொட்டி அடுப்பை 'சிம்’மில் வைத்துக் கிண்டவும். மாவுக் கலவை சேர்ந்து, வெந்து பொன்னிறமானதும், நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
சாம்பார், ரசம், தயிர் சாதத்துக்கு இது அருமையாக இருக்கும்.
Post a Comment