அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? - அழகு குறிப்பு
உங்களுக்கு அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? 1.வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்த...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_3768.html
உங்களுக்கு அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?
1.வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி,massage செய்யவும்.பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.
2.தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து,
அதனை தலைக்கு தடவி பின் 30நிமிடம் கழித்து அதேபோல் கழுவவும்.
3.ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் தடவி massage செய்து கொள்ளவும்.
(கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவெண்டும்.
பலன் கிடைக்கும்!)
முடி கொட்டுவதை தடுக்க
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஃபிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள் ஷாம்பு தினமும் போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவுது நின்றுவிடும்.
முடி கொட்டுவதை தடுக்கும் மற்றொரு முறை
விளக்கெண்ணெய். தேங்காய் எண்ணெய். ஆலிவ் ஆயில் ஆகியவற்றைக் கலந்து ஏதாவொரு எண்ணெய் சற்று சூடுபடுத்தி தலையில் எல்லா இடத்திலும் பரவும்படி மசாஜ் செய்யவும்.
பிறகு சூடுதண்ணீரில் நனைத்து சூடான ஒரு டவலால் இறுக்கமாக கட்டி குறைந்தது பத்து நிமிடமாவது வைத்திருந்து ஷாம்பு போட்டு குளியுங்கள். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்தாலும் முடி கொட்டுவது நிற்கும்.
இந்த சிகிச்சைகளை செய்யும் பொழுது தலைவலி வந்தாலோ அல்லது அதிகரித்தாலோ நிறுத்திவிடுங்கள். ஒவ்வொன்றாக செய்துப் பார்த்த பிறகு நிறுத்துங்கள்.
Post a Comment