சமையலறை எஜமானிக்கு
சமையலறை எஜமானிக்கு * சமைக்கும் போது சமையலை மட்டும் பார்க்கவும். கவனம் இல்லாவிடில் களத்தில் பலமாக காயம் அடையும் சாத்தியம் அதிகம். * காய்கறி ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_2057.html
சமையலறை எஜமானிக்கு
* சமைக்கும் போது சமையலை மட்டும் பார்க்கவும். கவனம் இல்லாவிடில் களத்தில் பலமாக காயம் அடையும் சாத்தியம் அதிகம்.
* காய்கறி வெட்டும் போது வெட்டுப்பலகையை உபயோகிக்கவும்.
* வெதுப்பியை போடும் போது தேவையான சூட்டிற்கு வைத்தல் அவசியம். வெதுப்ப வேண்டியதும் கருகி, கையும் கருகும் வாய்ப்பு அதிகம். (சொந்த அனுபவம்)
* வெதுப்பியில் வேலை செய்யும் போது மறக்காமல் கைகவசம் அணியுங்கள். வேலை முடிந்ததும் வெதுப்பியை மறக்காமல் நிறுத்துங்கள்.
* சமைக்கும் போது நீரை சமையல்கட்டில் கீழே ஊற்றுவதையோ,தெளிப்பதையோ தவிருங்கள். வீணாக காலையோ இடுப்பையோ உடைப்பதில் இருந்து தப்பிக்கலாம்.
* கத்திகளை கண்ட இடத்தில் போட்டு வைக்காதீர்கள். அதற்கென ஒரு இடத்தில் வையுங்கள். முடிந்தால் கத்தி கவசங்களை வாங்கி, மாட்டி வையுங்கள்.
* சமைக்கும் போது முடியை மடித்து கட்டி வையுங்கள். நீளமுடி இருப்பவர்கள் அதிகம் கவனமாக இருக்க வேண்டும்.
* சுடு எண்ணெயில் சமையல் செய்யும் போது, நீண்ட கைபிடி கொண்ட அகப்பைகளை பயன்படுத்துங்கள்.
*சுடு நீரை கையாளும் போது மிகவும் கவனமாக இருங்கள்.
* சமைத்த உடன் எதையும் சுட சுட வாயில் போடாதீர்கள்.
Post a Comment