ரசிக்க ருசிக்க! பச்சை உருண்டை குழம்பு
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, கடுகு - 2 டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், புளி - 2 எ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_20.html
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, கடுகு - 2 டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், புளி - 2 எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயப்பொடி - அரை டீஸ்பூன்.
செய்முறை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீர் இல்லாமல் வடித்து அதனுடன் உப்பு, தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி கலந்து சற்று கரகரப்பாக அரைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, அரைத்த பருப்புக் கலவையில் கொட்டவும். இதுதான் உருண்டைக்குத் தேவையான பருப்புக் கலவை.
பிறகு ஒரு அடிகனமான, அகலமான வாணலியில் கறிவேப்பிலை தாளித்து, அதில் புளியை நீர்க்கக் கரைத்து ஊற்றி, உப்பையும் போடவும். அதில் சாம்பார் பொடியையும் போட்டு எல்லாம் சேர்ந்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையை மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டி அதில் போடவும். 4 உருண்டைகளை உருட்டிப் போடவும். அவை வெந்து மேலே வந்தவுடன் மீதி 4 உருண்டைகளை போடவும். எல்லா உருண்டைகளும் கொதித்து மேலே வந்தததும் அடுப்பை சிறிய தீயில் வைத்து குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.
இந்த முறையில் செய்யும்போது, உருண்டைகளை வேக வைக்கத் தேவையில்லை. குழம்பிலேயே உருண்டைகள் கொதித்து வெந்துவிடுவதால், வித்தியாசமான ருசி கிடைக்கும். நெஞ்சுக்குள்ளேயே நிற்கும் ருசி அது!
Post a Comment