சமையல் குறிப்பு: எளிமையான சமையல் டிப்ஸ்
சமையல் குறிப்பு: எளிமையான சமையல் டிப்ஸ் சவாலே சமாளி 1. சாம்பார் வைக்கும்போது சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் உடனடியாக 2 தேக்கரண்டி கடலை...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_03.html
சமையல் குறிப்பு: எளிமையான சமையல் டிப்ஸ்
சவாலே சமாளி
1. சாம்பார் வைக்கும்போது சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் உடனடியாக 2 தேக்கரண்டி கடலை மாவு, 1 தேக்கரண்டி அரிசிமாவு என இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து சாம்பாரில் விட்டு கொதிக்க வைத்து இறக்கினால் சாம்பார் தயார்.
2. சாம்பாரில் மிளகாய்த்தூள் காரம் அதிகமாகிவிட்டால் உடனடியாக 2 தக்காளிகளை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கி சாம்பாரில் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்தால் மிதமான காரத்துடன் சாம்பார் தயார்.
3. சாம்பாரில் புளிப்புச்சுவை அதிகமாகிவிட்டால் உடனடியாக ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சுவைக்கு தகுந்த பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி சாம்பாரில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும் சுவையான சாம்பார் தயார்.
4. சாம்பார் வைக்க பருப்பு சிறிதளவே இருந்தால், கவலைவேண்டாம் பருப்பு சாம்பாருக்கு பதிலாக கையில் உள்ள எந்த காய்கறிகளானாலும் அதில் சேர்த்து சாம்பார் வைத்தால் சுவையான காய்கறிகளுடன் கூடிய சாம்பார் தயார். இதுபோன்று சாம்பார் வைத்தால் 2 பேருக்கு வைக்கும் சாம்பார் 4 பேருக்கு போதுமான சாம்பார் தயார்.
Post a Comment