30 வகை வெரைட்டி ரைஸ்!
வெரி வெரி டேஸ்ட்டி.. டேஸ்ட்டி.. 30 வகை வெரைட்டி ரைஸ்! காலிஃப்ளவர் ரைஸ் தேவையானவை: அரிசி - ஒன்றரை கப், காலிஃப்ளவர் - 2 கப் (உதிர்த்துக் கொள...
https://pettagum.blogspot.com/2011/05/30.html
வெரி வெரி டேஸ்ட்டி.. டேஸ்ட்டி..
30 வகை வெரைட்டி ரைஸ்!
காலிஃப்ளவர் ரைஸ்
தேவையானவை: அரிசி - ஒன்றரை கப், காலிஃப்ளவர் - 2 கப் (உதிர்த்துக் கொள்ளவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், கிராம்பு - 2, பச்சைமிளகாய் - 2, தக்காளி கெட்சப் - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கிராம்பு, பச்சைமிளகாய் போட்டு வறுக்கவும். உதிர்த்து வைத்துள்ள காளிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும். உப்பு, தக்காளி கெட்சப், மல்லித்தழை சேர்த்து கிளறி வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.
________________________________________
கத்திரிக்காய் சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், கத்திரிக்காய் - 5 (மீடியம் சைஸ்), வெங்காயம் - 3 (மீடியம் சைஸ்), தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும். வெங்காயத்தையும், கத்திரிக்காயையும் நடுத்தரமாக நறுக்கவும் (ரொம்பவும் பொடியாக நறுக்கினால் குழைந்துவிடும். சுவையும் இல்லாமல் போய்விடும்). தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், வெங்காயத்தை வதக்கி பிறகு கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். அரைத்த பொடியை தூவி 2 நிமிடம் கிளறவும். பிறகு, ஆறவைத்துள்ள சாதத்தை சேர்த்து லேசாக கிளறி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
கொத்துமல்லி சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப்,
கொத்துமல்லி - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), பச்சைமிளகாய் - 5, சின்ன வெங்காயம் - 5 (தோலுரித்து வைக்கவும்), பூண்டு - 5 பல், இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன், தேங்காய் - ஒரு சிறிய துண்டு, பட்டை - ஒரு துண்டு, சீரகம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1 (அரிசியைத் தவிர மேலே தந்துள்ள எல்லா பொருட்களையும் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்), சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 3 (பொடியாக நறுக்கவும்) பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 1, முந்திரி - 6 (உடைத்துக்கொள்ளவும்). நெய் (அ) எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை முறுகலாக வறுத்து எடுக்கவும். முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, பூண்டு, சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து, மேலும் 2 நிமிடம் வதக்கவும். அதனுடன், 3 கப் தண்ணீர் ஊற்றி, ஊற வைத்த அரிசியை வடித்து போட்டு வேகவிடவும் (அ) குக்கரில் சமைக்கவும். சிறிது வறுத்த முந்திரியையும், வதங்கிய வெங்காயத்தையும் தூவி பரிமாறவும்.
________________________________________
சின்ன வெங்காய சாதம்
தேவையானவை: காய்ந்த மிளகாய் - 20 (இரண்டாக கிள்ளிக்கொள்ளவும்), கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், புளி விழுது - 2 டீஸ்பூன், அரிசி - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகைப் போடவும். வெடித்ததும், கடலைப் பருப்பு, மிளகாய்துண்டுகள், புளிவிழுது, உப்பு, மஞ்சள்தூள், அரிசி சேர்த்து 5 கப் (1:5 என்ற விகிதத்தில்) தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். உரித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும்வரை சமைக்கவும். காரசாரமான சின்ன வெங்காய சாதம் ரெடி.
________________________________________
கிரீன் ரைஸ்
தேவையானவை: அரிசி - 3 கப், மல்லித்தழை - ஒரு கட்டு, கறிவேப்பிலை - சிறிது, ஏலக்காய், கிராம்பு, பட்டை - தலா 2, பூண்டு - 3 பல், இஞ்சி - ஒரு துண்டு, வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 6, மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, கரம்மசாலா தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம் இவற்றை விழுதாக அரைக்கவும். மீதி வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு வறுத்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அரைத்த விழுதைக் கொட்டி, கரம்மசாலா தூள், மிளகாய்த்தூள் போட்டு கிளறவும். உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கியதும் ஆற வைத்துள்ள சாதத்தைப் போட்டுக் கிளறவும். அதிக நேரம் கிளற வேண்டாம். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
சூப்பர் டேஸ்ட்டி ரைஸ்
தேவையானவை: உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப், வறுத்த சீரகத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு - 3 டேபிள்ஸ்பூன், கரம்மசாலா தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 3 (நீளவாக்கில் நறுக்கவும்), பச்சைப் பட்டாணி - கால் கப் (வேகவைத்துக் கொள்ளவும்), கறிவேப்பிலை - சிறிது, சீரகம், கடுகு - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகத்தை வெடிக்க விடவும். கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பச்சைமிளகாயை சேர்க்கவும். அதில் சாதம், வேகவைத்த பட்டாணியை சேர்த்து 2 நிமிடம் கிளறவும். கரம்மசாலா தூள், தனியாத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
காரசார சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, தேங்காய் துருவல், வடித்த சாதம், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் கிளறவும். மீதி பொருட்ளை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கடாயில் உள்ள சாதத்துடன் சேர்த்து ஒரு நிமிடம் லேசாக கிளறி இறக்கவும்.
________________________________________
சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாதம்
தேவையானவை: அரிசி - 2 கப், சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1 (சதுரமாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்), மல்லித்தழை - சிறிது, குடமிளகாய் - 1 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), வெங்காயம் - 1, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - இரண்டரை டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும். தனியா, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, அரை டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். ஒரு நிமிடம் கழித்து வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். பின்னர், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் குடமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கி, வேக வைத்துள்ள சக்கரைவள்ளிக்கிழங்கை சேர்த்து கிளறவும். வறுத்து அரைத்த மசாலாவைத் தூவவும். சாதம், உப்பு, சர்க்கரை சேர்த்து மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
புரோட்டீன் புலாவ்
தேவையானவை: வெள்ளைக் கொண்டைக்கடலை, வெள்ளைப் பட்டாணி, பச்சைப் பட்டாணி, வேர்க்கடலை - தலா அரை கப், அரிசி - ஒன்றரை கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு, புதினா, மல்லித்தழை - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும். பருப்புகளை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் குக்கரில் வேக விடவும். பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தை வறுத்து, அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேகவைத்த பருப்புகளை போட்டு 2 நிமிடம் வதக்கவும். இதனுடன், ஊறவைத்த அரிசியை வடித்து உப்பு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக விடவும். 2 விசில் வந்ததும் இறக்கி, ஆறியதும் மல்லித்தழை, புதினா தூவி பரிமாறவும்.
________________________________________
தக்காளி பிரியாணி
தேவையானவை: அரிசி - ஒரு கப், தக்காளி - 4, பூண்டு - 4 பல், பச்சைமிளகாய் - 4, பட்டை - 2 துண்டு, கிராம்பு - 2, சீரகம் - அரை டீஸ்பூன், ஏலக்காய் - 2, பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும். தக்காளியைத் தனியாகவும், பூண்டு - பச்சைமிளகாயைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை இவற்றுடன் பூண்டு - பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கி, தக்காளி சாறை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து, எண்ணெய் பிரியும்வரை கொதிக்க விடவும். வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறி மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
பெங்காலி புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், பிரிஞ்சி இலை - 1, திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், கிராம்பு - 2, ஏலக்காய் - 1, பட்டை - 1, வெங்காயம் - 1, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ - 4 இழை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் வதங்கியதும், சாதத்தை சேர்த்து, உப்பு, சர்க்கரை போட்டுக் கிளறவும். பாலில் குங்குமப்பூவை கரைத்து, இதில் ஊற்றிக் கிளறவும். வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்றாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
________________________________________
கீரை-கேரட் புலாவ்
தேவையானவை: பொடியாக நறுக்கிய ஏதேனும் ஒரு கீரை - ஒரு கப், கேரட் - கால் கப் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), சோம்பு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய் - 1, கிராம்பு - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), பட்டை - ஒரு சிறிய துண்டு, பாஸ்மதி அரிசி - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிது.
செய்முறை: அரிசியைக் களைந்து 15 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் நெய்யை விட்டு, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பச்சைமிளகாய், பட்டை சேர்த்து வறுக்கவும். பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள கீரை, கேரட்டை சேர்த்து 2 நிமிடம் கிளறி, அரிசி, உப்பு, மிளகாய்த்தூள், இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து சமைக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
ராஜ்மா பிரியாணி
தேவையானவை: வேக வைத்த ராஜ்மா - அரை கப், சாதம் - ஒரு கப், தக்காளி - 3, பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கிராம்புத்தூள் - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தயிர் - 5 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பிறகு தக்காளித் துண்டுகளைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். மசாலாத்தூள், கிராம்புத்தூள், ஏலக்காய்த்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கிளறியதும், ஒரு டேபிள்ஸ்பூன் தயிர், வெந்த ராஜ்மாவைப் போட்டு நன்றாக கிளறவும். ராஜ்மா மசாலா கிரேவி ரெடி!
பரிமாறும் விதம்: ஒரு சதுர (அ) வட்ட பாத்திரத்தில் முதலில்.. சிறிது சாதத்தைப் பரப்பி, 2 டேபிள்ஸ்பூன் தயிரை பரவலாக ஊற்றி, சிறிது பிரியாணி மசாலாத்தூளை தூவவும். அடுத்து, வேக வைத்த ராஜ்மா மசாலாவை பரப்பவும். கடைசியில் மறுபடியும் மீதமுள்ள சாதத்தை பரப்பி, 2 டேபிள்ஸ்பூன் தயிரை ஊற்றி, மீதம் உள்ள பிரியாணி மசாலாத்தூளை மேலே தூவவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
மகாராஜா புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், தக்காளி ப்யூரி - அரை கப் (தண்ணீர் சேர்க்காமல் அரைத்த ஜூஸ்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 3 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கிராம்பு - 2, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு, மிளகுத்தூள், கிரம்பு போட்டு வதக்கவும். உப்பு சேர்த்து, 2 நிமிடம் கழித்து தக்காளி ப்யூரியை சேர்த்து கிளறவும். நன்றாக இறுகியதும், சாதத்தை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, தேங்காய் துருவல், வடித்த சாதம், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் கிளறவும். மீதி பொருட்ளை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கடாயில் உள்ள சாதத்துடன் சேர்த்து ஒரு நிமிடம் லேசாக கிளறி இறக்கவும்.
________________________________________
சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாதம்
தேவையானவை: அரிசி - 2 கப், சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1 (சதுரமாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்), மல்லித்தழை - சிறிது, குடமிளகாய் - 1 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), வெங்காயம் - 1, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - இரண்டரை டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும். தனியா, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, அரை டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். ஒரு நிமிடம் கழித்து வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். பின்னர், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் குடமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கி, வேக வைத்துள்ள சக்கரைவள்ளிக்கிழங்கை சேர்த்து கிளறவும். வறுத்து அரைத்த மசாலாவைத் தூவவும். சாதம், உப்பு, சர்க்கரை சேர்த்து மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
புரோட்டீன் புலாவ்
தேவையானவை: வெள்ளைக் கொண்டைக்கடலை, வெள்ளைப் பட்டாணி, பச்சைப் பட்டாணி, வேர்க்கடலை - தலா அரை கப், அரிசி - ஒன்றரை கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு, புதினா, மல்லித்தழை - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும். பருப்புகளை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் குக்கரில் வேக விடவும். பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தை வறுத்து, அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேகவைத்த பருப்புகளை போட்டு 2 நிமிடம் வதக்கவும். இதனுடன், ஊறவைத்த அரிசியை வடித்து உப்பு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக விடவும். 2 விசில் வந்ததும் இறக்கி, ஆறியதும் மல்லித்தழை, புதினா தூவி பரிமாறவும்.
________________________________________
தக்காளி பிரியாணி
தேவையானவை: அரிசி - ஒரு கப், தக்காளி - 4, பூண்டு - 4 பல், பச்சைமிளகாய் - 4, பட்டை - 2 துண்டு, கிராம்பு - 2, சீரகம் - அரை டீஸ்பூன், ஏலக்காய் - 2, பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும். தக்காளியைத் தனியாகவும், பூண்டு - பச்சைமிளகாயைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை இவற்றுடன் பூண்டு - பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கி, தக்காளி சாறை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து, எண்ணெய் பிரியும்வரை கொதிக்க விடவும். வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறி மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
பெங்காலி புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், பிரிஞ்சி இலை - 1, திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், கிராம்பு - 2, ஏலக்காய் - 1, பட்டை - 1, வெங்காயம் - 1, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ - 4 இழை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் வதங்கியதும், சாதத்தை சேர்த்து, உப்பு, சர்க்கரை போட்டுக் கிளறவும். பாலில் குங்குமப்பூவை கரைத்து, இதில் ஊற்றிக் கிளறவும். வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்றாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
________________________________________
கீரை-கேரட் புலாவ்
தேவையானவை: பொடியாக நறுக்கிய ஏதேனும் ஒரு கீரை - ஒரு கப், கேரட் - கால் கப் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), சோம்பு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய் - 1, கிராம்பு - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), பட்டை - ஒரு சிறிய துண்டு, பாஸ்மதி அரிசி - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிது.
செய்முறை: அரிசியைக் களைந்து 15 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் நெய்யை விட்டு, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பச்சைமிளகாய், பட்டை சேர்த்து வறுக்கவும். பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள கீரை, கேரட்டை சேர்த்து 2 நிமிடம் கிளறி, அரிசி, உப்பு, மிளகாய்த்தூள், இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து சமைக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
ராஜ்மா பிரியாணி
தேவையானவை: வேக வைத்த ராஜ்மா - அரை கப், சாதம் - ஒரு கப், தக்காளி - 3, பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கிராம்புத்தூள் - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தயிர் - 5 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பிறகு தக்காளித் துண்டுகளைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். மசாலாத்தூள், கிராம்புத்தூள், ஏலக்காய்த்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கிளறியதும், ஒரு டேபிள்ஸ்பூன் தயிர், வெந்த ராஜ்மாவைப் போட்டு நன்றாக கிளறவும். ராஜ்மா மசாலா கிரேவி ரெடி!
பரிமாறும் விதம்: ஒரு சதுர (அ) வட்ட பாத்திரத்தில் முதலில்.. சிறிது சாதத்தைப் பரப்பி, 2 டேபிள்ஸ்பூன் தயிரை பரவலாக ஊற்றி, சிறிது பிரியாணி மசாலாத்தூளை தூவவும். அடுத்து, வேக வைத்த ராஜ்மா மசாலாவை பரப்பவும். கடைசியில் மறுபடியும் மீதமுள்ள சாதத்தை பரப்பி, 2 டேபிள்ஸ்பூன் தயிரை ஊற்றி, மீதம் உள்ள பிரியாணி மசாலாத்தூளை மேலே தூவவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
மகாராஜா புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், தக்காளி ப்யூரி - அரை கப் (தண்ணீர் சேர்க்காமல் அரைத்த ஜூஸ்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 3 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கிராம்பு - 2, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு, மிளகுத்தூள், கிரம்பு போட்டு வதக்கவும். உப்பு சேர்த்து, 2 நிமிடம் கழித்து தக்காளி ப்யூரியை சேர்த்து கிளறவும். நன்றாக இறுகியதும், சாதத்தை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
Post a Comment