ரசிக்க ருசிக்க…! ருசியான சுருள் நாடா
சுருள் நாடா தேவையானவை: மைதாமாவு & கால் கிலோ, எண்ணெய் & பொரிப்பதற்கு தேவையான அளவு, நெய் & அரை கப், அரிசிமாவு & 3 டேபிள்ஸ்ப...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_3204.html
சுருள் நாடா
தேவையானவை:
மைதாமாவு & கால் கிலோ,
எண்ணெய் & பொரிப்பதற்கு தேவையான அளவு,
நெய் & அரை கப்,
அரிசிமாவு & 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு & தேவையான அளவு.
செய்முறை: மைதாவில் உப்பு போட்டு, நீர்விட்டுப் பிசைந்து கொள்ளவும். அரிசி மாவையும் நெய்யையும் சேர்த்துக் குழைத்துக்கொள்ளவும். பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாகத் தேய்க்கவும். ஒரு சப்பாத்தியை எடுத்து, நெய் + அரிசிமாவுக் கலவையை அதன் மேல் நன்றாகத் தடவி, மேலே இன்னொரு சப்பாத்தியால் மூடவும். பிறகு, இரண்டு சப்பாத்திகளையும் அழுத்தி பாய் போல சுருட்டி, சப்பாத்திக் குழவியால் அப்படியே நீளவாக்கில் ரிப்பன் போல தேய்க்கவும். இதை, 2 இன்ச் நீளத் துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். பண்டிகைகளுக்குச் செய்ய ஏற்ற பாரம்பரியமான பலகாரம் இது.
Post a Comment