சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில்-
தேங்காய் பர்பி சில நேரங்களில் அல்வா போல் ஆகிவிடுகிறது. இது ஏன்? சரியான பதம் என்ன? தேங்காயைத் துருவிய பிறகு துருவலை மிக்ஸியில் நைஸாக அரைக்க...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_2640.html
தேங்காய் பர்பி சில நேரங்களில் அல்வா போல் ஆகிவிடுகிறது. இது ஏன்? சரியான பதம் என்ன?
தேங்காயைத் துருவிய பிறகு துருவலை மிக்ஸியில் நைஸாக அரைக்கக் கூடாது. ஒண்ணும் ரெண்டுமாக அரைத்துக் கொண்டு, அரைத்த தேங்காய் துருவல் எவ்வளவு இருக்கிறதோ, அதற்கு இரண்டு பங்கு சர்க்கரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கொதிக்கும் சர்க்கரைக் கரைசலில் தேங்காய் சேர்த்து மேலும் கொதிக்கும் போது, கெட்டியான பதம் வரவில்லையென்றால், தனியாக இன்னொரு கடாயில், அரைத்த தேங்காய் துருவலுக்கு ரு பங்கு ரவையை நெய்விட்டு வறுத்து, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த ரவையைக் கொதிக்கும் பர்பி சர்க்கரைக் கலவையில் சேர்த்தால், உடனடியாக இறுகிவிடும்.
Post a Comment