கைமணம்! வெள்ளை காராமணி வடகம்
வெள்ளை காராமணி வடகம் தேவையானவை: வெள்ளை காராமணி & ஒரு கப், உப்பு & ருசிக்கேற்ப, காய்ந்த மிளகாய் & 10 அல்லது 12, பெரிய வெங்காயம்...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_2353.html
வெள்ளை காராமணி வடகம்
தேவையானவை: வெள்ளை காராமணி & ஒரு கப், உப்பு & ருசிக்கேற்ப, காய்ந்த மிளகாய் & 10 அல்லது 12, பெரிய வெங்காயம் & 2, கறிவேப்பிலை & சிறிது.
செய்முறை: காராமணியை முந்தின நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் காலையில் நீரை வடித்துவிட்டு, உப்பு, மிளகாய், சேர்த்து அரைக்கவும். வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி, காராமணி அரைத்த கலவையுடன் சேர்த்துப் பிசையவும்.
பிசைந்த கலவையை, பிளாஸ்டிக் ஷீட்டில் சின்னச் சின்னதாக கிள்ளிவைத்து, வெயிலில் காய விடவும். நன்கு காய்ந்ததும் டப்பாவில் எடுத்து வைத்துக்கொண்டு பொரித்த குழம்பு, கூட்டு ஆகியவற்றுக்கு தாளித்து சேர்க்கலாம். ருசி அபாரமாக இருக்கும்.
வெள்ளை காராமணி வடகம்: காராமணியுடன் ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பையும் ஊறவைத்து அரைத்தால், வடகம் உதிராமல் நன்கு கிள்ளிவைக்க வரும். உளுத்தம்பருப்பை காலையில் ஊறவைத்தால் போதும். இந்த வடகத்தை பொரித்து தனியாகவும் சாப்பிடலாம்.
-------------------------------------------------------------------
Post a Comment