மனதை அள்ளும் இந்த மங்களூர் போளி!
மங்களூர் போளி தேவையான பொருட்கள்: மைதா - 1 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - தேவையான அளவு,...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_1719.html
மங்களூர் போளி
தேவையான பொருட்கள்: மைதா - 1 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, அரிசி மாவு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: துவரம்பருப்பு, சர்க்கரை - தலா அரை கப், ஏலப்பொடி - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: மைதாவுடன் உப்பு, நெய் 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து, தேவையான தண்ணீரையும் சேர்த்து மிருதுவாகவும் சற்று இளக்கமாகவும் பிசைந்து, ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.
அடுத்து, பூரணத்துக்கு துவரம் பருப்பை குழையாமல் வேக வைத்து, தண்ணீரை வடியுங்கள். சர்க்கரையையும் வெந்த பருப்பையும் அடுப்பில் வைத்து சுருள கிளறி இறக்குங்கள். ஆறியதும் ஏலக்காய்தூள் சேர்த்து, நைஸாக அரையுங்கள். இதுதான் போளிக்கான பூரணம்.
இனி, இந்தப் பூரணத்தை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டுங்கள். முதலில் பிசைந்து ஊற வைத்திருக்கும் மைதாவில் இருந்து சிறிது எடுத்து, கிண்ணம்போல செய்து, பூரணத்தை உள்ளே வைத்து நன்கு மூடி, அரிசி மாவில் புரட்டி மெல்லியதாக திரட்டுங்கள். இதை சூடான தோசைக் கல்லில் போட்டு, இரு புறமும் திருப்பிவிட்டு, வெந்ததும் எடுத்து நெய் தடவுங்கள்.
மனதை அள்ளும் இந்த மங்களூர் போளி!
-------------------------------------------------------------------------------
Post a Comment